கீரை கடைசல் : ஒரே மாதிரி கீரை கடைசல் செய்து போர் அடித்துவிட்டதா? இதோ இதுபோல் வித்யாசமாக செய்து பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கீரை கடைசல் : ஒரே மாதிரி கீரை கடைசல் செய்து போர் அடித்துவிட்டதா? இதோ இதுபோல் வித்யாசமாக செய்து பாருங்கள்!

கீரை கடைசல் : ஒரே மாதிரி கீரை கடைசல் செய்து போர் அடித்துவிட்டதா? இதோ இதுபோல் வித்யாசமாக செய்து பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Updated Apr 11, 2025 01:11 PM IST

கீரை கடையல் : பருப்பை வைத்துதான் கீரை கடையல் செய்வீர்கள். இதில் புதிய மசாலா அரைத்து செய்கிறீர்கள். ஒருமுறை ருசித்தால் இதை நீங்கள் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

கீரை கடைசல் : ஒரே மாதிரி கீரை கடைசல் செய்து போர் அடித்துவிட்டதா? இதோ இதுபோல் வித்யாசமாக செய்து பாருங்கள்!
கீரை கடைசல் : ஒரே மாதிரி கீரை கடைசல் செய்து போர் அடித்துவிட்டதா? இதோ இதுபோல் வித்யாசமாக செய்து பாருங்கள்!

தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – 2 ஸ்பூன்

• பூண்டு – 8 பல்

• வர மிளகாய் – 4

• சீரகம் – ஒரு ஸ்பூன்

• கடலை – ஒரு டேபிள் ஸ்பூன்

• சின்ன வெங்காயம் – 2

• துவரம் பருப்பு – 2 ஸ்பூன்

• தேங்காய்த் துருவல் – ஒரு கப்

கீரையை வேக வைக்க தேவையான பொருட்கள்

• பூண்டு – 15 பல்

• சின்ன வெங்காயம் – 20

• தக்காளி – 1

• கீரை – ஒரு கட்டு (கழுவி சுத்தம் செய்தது)

• பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன்

• மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

• கல் உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – 2 ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• சீரகம் – கால் ஸ்பூன்

• வர மிளகாய் – 2

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• சின்ன வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து இது சூடானவுடன், பூண்டு, வர மிளகாய், சீரகம், கடலை, 2 சின்ன வெங்காயம், துவரம் பருப்பு சேர்த்து சிவந்தவுடன், தேங்காய்த் துருவலையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவேண்டும். இதை ஆறவைத்து அரைத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

2. ஒரு கடாயில் சில துளிகள் எண்ணெய் விட்டு அது சூடானவுடன் அதில் சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் என அனைத்தும் சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கீரையை சேர்த்து நன்றாக வெந்தவுடன் எடுத்து தனியாக மத்தில் கடைந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

3. அடுக்கு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன், வர மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

4. அனைத்தும் பொன்னிறமானவும், இதில் அரைத்த விழுது மற்றும் மசித்த கீரை இரண்டையும் சேர்த்து போதிய அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொதிக்கவிடவேண்டும். பச்சை வாசம் போனவுடன், எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கினால் சூப்பர் சுவையான, வித்யாசமான கீரை மசியல் தயார்.

இதை சாதம், டிஃபன் இரண்டுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். வழக்கமாக இல்லாமல் இதுபோல் கீரை மசியல் செய்துகொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பருப்பை வைத்துதான் கீரை கடையல் செய்வீர்கள். இதில் புதிய மசாலா அரைத்து செய்கிறீர்கள். ஒருமுறை ருசித்தால் இதை நீங்கள் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

குறிப்பு 

இந்த கீரை மசியலுக்கு நீங்கள் எந்த கீரையை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். 

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.