கோபி-சீஸ் பராத்தா : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் கோபி-சீஸ் பராத்தா! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கோபி-சீஸ் பராத்தா : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் கோபி-சீஸ் பராத்தா! இதோ ரெசிபி!

கோபி-சீஸ் பராத்தா : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் கோபி-சீஸ் பராத்தா! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Published Apr 14, 2025 09:42 AM IST

கோபி-சீஸ் பராத்தா : ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சீஸ் கோபி பராத்தாக்களைத் தான் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பீர்கள். ஒருமுறை ருசித்த பின்னர் உங்கள் வீட்டில சாதாரண சப்பாத்திக்களே செய்ய மாட்டீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

கோபி-சீஸ் பராத்தா : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் கோபி-சீஸ் பராத்தா! இதோ ரெசிபி!
கோபி-சீஸ் பராத்தா : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் கோபி-சீஸ் பராத்தா! இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

சப்பாத்தி மாவு தயாரிக்க தேவையான பொருட்கள்

• கோதுமை மாவு – ஒரு கப்

• உப்பு – தேவையான அளவு

• நெய் – ஒரு ஸ்பூன்

• சூடான தண்ணீர் – தேவையான அளவு

காலிஃப்ளவர் ஸ்டஃபிங் செய்ய தேவையான பொருட்கள்

• கரம் மசாலா – அரை ஸ்பூன்

• சீஸ் – ஒரு கப்

• உப்பு – தேவையான அளவு

• காளிஃப்ளவர் – ஒன்றரை கப் (அதன் பெட்டல்களை பறித்து, சூடான உப்பு தண்ணீரில் சேர்த்து அலசிவிட்டு, துருவிக்கொள்ளவேண்டும் அல்லது பொடியான நறுக்கிக்கொள்ளவேண்டும்)

• கஷ்மீரி மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்

• ஓமம் – அரை ஸ்பூன்

• நெய் – பராத்தாக்களை செய்து எடுக்க தேவையான அளவு

செய்முறை

1. ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, நெய் சேர்த்து கலந்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சூடான தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவேண்டும். பிசைந்த மாவை 20 நிமிடங்கள் மூடி வைத்து ஊறவைக்கவேண்டும்.

2. துருவிய காளிஃப்ளவருடன் சீஸ் மற்றும் ஓமம் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவேண்டும்.

3. மாவை எடுத்து மீண்டும் நன்றாக பிசைந்துவிட்டு, அதை சிறிய உருண்டை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்துக்கொள்ளவேண்டும்.

4. அதில் செய்து வைத்துள்ள காலிஃப்ளவர் ஸ்டஃபிங்கை வைக்கவேண்டும். அடுத்து அதில் கஷ்மீரி மிளகாய்த் தூள் மற்றும் கரம் மசாலாவைத் தூவி அதை சுருட்டி மீண்டும் சப்பாத்தியாக தேய்க்கவேண்டும்.

5. சப்பாத்தி கடாயை சூடாக்கி, அதில் செய்து வைத்துள்ள கோபி சீஸ் பராத்தாக்களை சேர்த்து இருபுறமும் நெய் தடவி பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவேண்டும்.

6. சூப்பர் சுவையான காலிஃப்ளவர் சீஸ் பராத்தாக்கள் தயார்.

இதற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட தயிர் பச்சடி அல்லது வெள்ளரி பச்சடி போதுமானது. உங்களுக்கு விருப்பம் என்றால் வேறு கிரேவிகளும் செய்துகொள்ளலாம். இது சீஸ் சேர்த்து மிகுந்த சுவையைத் தரக்கூடியது என்பதால் உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி இந்த பராத்தாக்களை சாப்பிடுவார்கள். இதை லன்ச் பாக்ஸிலும் கொடுத்துவிட சுவை அள்ளும். ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சீஸ் கோபி பராத்தாக்களைத் தான் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பீர்கள். ஒருமுறை ருசித்த பின்னர் உங்கள் வீட்டில சாதாரண சப்பாத்திக்களே செய்ய மாட்டீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.