Global Warming : அதிகரிக்கும் புவி வெப்பமடைதல் பிரச்னை - கடலோர தாவரங்களுக்கு என்ன ஆனது? – அதிர்ச்சி ஆய்வு!
Global Warming : புவிவெப்பமடைதல் பிரச்னை அதிகரித்து வரும் சூழலில், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துவரும் வேளையில், கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்தில் கடலோர தாவரங்கள் 12 சதவீம் குறைந்துள்ளது என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

Global Warming : அதிகரிக்கும் புவி வெப்பமடைதல் பிரச்னை - கடலோர தாவரங்களுக்கு என்ன ஆனது? – அதிர்ச்சி ஆய்வு!
2023ம் ஆண்டு தான் இதுவரையில் உள்ள ஆண்டுகளிலே வெப்பம் மிகுந்த ஆண்டாக உள்ளது.
2023, உலக வானிலை மாற்ற நிறுவனத்தின்,"State of the climate in Asia" ஆய்வறிக்கையில்,1960க்குப் பின், ஆசியா கண்டம், உலகின் பிற பகுதிகளைவிட அதிகமாக வெப்பமடைந்து வருகிறது எனும் செய்தி உள்ளது.
மேலும், அதிக கரியமிலவாயு வெளியீட்டின் காரணமாக, இந்தியப் பெருங்கடலின் வெப்பம் 1950-2020 காலத்தில், நூற்றாண்டிற்கு, 1.2°C அதிகரித்திருந்தது, தற்போதைய ஆய்வுகளின்படி, 2100ல் 1.7°C - 3.8°C வரை வெப்பம் உயரும் (தற்போதைய அளவில் கரியமிலவாயுவின் வெளியீடு தொடர்ந்தால்) எனத் தெரியவந்துள்ளது.