Gardening Tips : மாடித்தோட்டத்திலே சிவப்பு குடை மிளகாயை நீங்கள் வளர்க்கலாம்; அது எப்படி என்று பாருங்கள்!
Gardening Tips : நீங்கள் மாடித்தோட்டத்திலேயே சிவப்பு குடை மிளகாயை வளர்க்க முடியும். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Gardening Tips : வீட்டிலேயே நீங்கள் சிவப்பு குடை மிளகாயை வளர்க்க முடியும்
சிவப்பு குடை மிளகாய் சூப்பர் ஃபுட் என்று கூறுப்படும் அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுதான். இதன் மிதமான இனிப்பு சுவை மற்றும் மொறுமொறுப்பான குணத்துக்காக இதை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால், இவை பச்சை குடை மிளகாயைவிட கொஞ்சம் கூடுதல் விலை கொண்டவை. இதனால் மக்கள் சிவப்பு குடை மிளகாயை அதிகம் வாங்க முடிவதில்லை. ஆனால் நீங்கள் இதை வீட்டிலேயே வளர்க்க முடியும். மேலும் அதிக அறுவடை காலங்களில் விற்கலாம். அண்டை வீடுகளுக்கு பரிசாகக் கொடுக்கலாம்.
விதைகள்
உங்கள் வீட்டில் சிவப்பு குடை மிளகாய் இருந்தால், அதன் விதைகளை எடுக்கலாம் அல்லது விதைகளை மார்க்கெட்டில் இருந்து வாங்கிக்கொள்ளலாம். சிவப்பு குடை மிளகாயை மெதுவாக வெட்டி விதைகள் ஆரோக்கியமானதாக உள்ளதா என்பதை பார்த்துவிட்டு, மெதுவாக எடுக்கவேண்டும். கரும்புள்ளிகள் இருந்தால் எடுக்கக் கூடாது.
முளைக்க வைக்கும் வழி
பெரிய தொட்டிக்கு மாற்றும் முன்னர் விதைகளை முளைக்க வைக்கவேண்டும். நல்ல தரமான மண்ணில் விதைகளை இடவேண்டும். மேலே ஒரு லேயர் மண் தூவி மூடிவிடுங்கள். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றுங்கள். அதை ஒரு மூடி அல்லது பிளாஸ்டிக் கவர் போட்டு மூடிவைத்தால்தான் ஈரப்பதம் நிலைத்திருக்கும்.
எத்தனை பெரிய தொட்டி?
சிவப்பு குடை மிளகாய்கள் நீண்டு வளரக்கூடியது என்பது அதை தாங்கும் சப்போர்ட்கள் தேவை. நல்ல அடித்தளமும் இருக்கவேண்டும். எனவே தொட்டி, 14 இன்ச்கள் ஆழமானதாக இருக்கவேண்டும். இது செடியின் எடையை தாங்கும் திறன் கொண்டதாக இருக்கவேண்டும்.
மண்ணில் என்ன இருக்கவேண்டும்?
நல்ல முறையில் மண்ணை தயார்படுத்துவதுதான் குடைமிளகாய் செழித்து வளர உதவும். மண், ஆர்கானிக் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள், தேங்காய் நார்கள் என இட்டு மண்ணை நீங்கள் தயார்படுத்தவேண்டும். கூடுதல் ஊட்டச்சத்துக்கள் சேர்த்துக்கொள்வது நல்லது. பனிக்காலத்தில நடவு செய்யும்போது, மண்ணில் உள்ள களைகளை எடுத்துவிட்டு, உழுதுகொள்ளவேண்டும்.
எப்போது செடிகளை மாற்றவேண்டும்?
முளைக்கவைக்கவும், சரியான வெப்பநிலையை பராமரிக்கும்போதும், விதைகள் முளைக்கத் துவங்கும். கிட்டத்தட்ட 15 முதல் 20 நாட்களில் அது முளைவிடத் துவங்கும். ஒவ்வொரு விதையில் இருந்து முளை துவங்குவதை பார்த்தாலே அவை ஆரோக்கியமான செடி என்பதை கண்டுபிடித்துவிடலாம். அதற்கு, ஆரோக்கியமான செடிகள் வளரத் துவங்கிவிட்டன என்று பொருள். இதை நீங்கள் தற்போது பெரிய தொட்டிக்கு மாற்றலாம்.
சூரிய ஒளி தேவை
குடை மிளகாய்ச் செடிக்கு குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 6 மணி நேரம் சூரிய ஒளி தேவை. எனவே மாடியில் நல்ல சூரிய ஒளி படும் இடத்தை நீங்கள் தேர்வு செய்துகொள்ளவேண்டும். அதற்கு நேரடி சூரிய ஒளி மற்றும் மறைமுக சூரிய ஒளி இரண்டும் தேவை. அங்கு இல்லாவிட்டால் நீங்கள் பால்கனியில் வைத்தும் வளர்த்துக்கொள்ளலாம். ஆனால் சூரிய ஒளி தேவை.
செடிக்கு எப்போது சப்போர்ட் கொடுக்கவேண்டும்
எப்போது செடி நீண்டு வளர்ந்து வரும்போது அதற்கு பற்றிக்கொள்ள ஏதேனும் சப்போர்ட் கொடுக்கவேண்டியது அவசியம். இதனால் அதிகம் வளையாமல், காய்கறிகளும் உடையாமல், வெளியே தள்ளாமல் வளரும். எனவே சிறிய மரக்குச்சியை செடியுடன் கட்டவேண்டும். செடி நீளமாக வளரும்போது இதை செய்யவேண்டும்.
உரம் தேவையா?
இது காய் என்பதால், கட்டாயம் ஆர்கானிக் உரம் தேவை. இது வேர்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்யும். அதற்கு நீங்கள் நீர் உரங்களைக் கொடுக்கலாம்.
பூக்கள்
காய்கள் வருவதற்கு முன், செடிக்கு வெளியில் சில வெள்ளை பூக்கள் தோன்றும். எனவே முதலில் சில பூக்களை நீக்கி, செடியை வலுவாக்கவேண்டும்.
முதல் குடை மிளகாய்
முதலில் தோன்றும் குடை மிளகாய் பசுமை நிறம் கொண்டதாக இருக்கும். இதை நீங்கள் 100 முதல் 120 நாட்களில் அறுவடை செய்துகொள்ளலாம். இதில் சிலவற்றை நீங்கள் முன்னரே கிள்ளி எடுத்துவிட்டு, மற்றவை செழித்து வளர வழிவகை செய்யவேண்டும். இது பழுக்க அடுத்த 3 வாரங்கள் ஆகும். நீங்கள் சாப்பிட ஏதுவான குடை மிளகாய்களை அறுவடை செய்துகொள்ளலாம்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்