தோட்டக்கலை குறிப்புகள் : இந்தப் பூச்செடிகளை மே மாதத்தில் வைத்தால், அது ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் பூ பூக்கும்!
தோட்டக்கலை குறிப்புகள் : நீங்கள் மே மாதத்தில் இந்தச் செடிகளையெல்லாம் நட்டு வைத்தால் அது ஜூலை – ஆகஸ்ட் மாதத்தில் பூக்களை பூக்கச் செய்யும். அது எந்தச் செடிகள் என்று பாருங்கள்.

இப்போது வளர்க்க ஏற்ற செடிகளைப் பாருங்கள். உங்கள் வீட்டின் பால்கனியை நீங்கள் அழகுபடுத்தவேண்டுமென்றால் அதற்கு அழகிய மலர்களைவிட சிறந்தது எதுவும் கிடையாது. உங்கள் வீட்டின் பால்கனி அல்லது தோட்டத்தை நீங்கள் கோடைக்காலத்தின் சூட்டில் சில செடிகளை நட்டுவைப்பதன் மூலம் குளுமைப்படுத்தலாம். இது கோடையின் அனைத்து மாதங்களிலும் பூக்களை மலரச்செய்யும். உங்கள் வீட்டில் எளிதாக வளர்க்க ஏற்ற பூச்செடிகளைப் பாருங்கள். அது உங்களுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் பூக்களை பூக்கச் செய்யும்.
சாமந்திப்பூ
இந்திய மலர்களிலேயே அழகிய மலர் என்றால் அது சாமந்திப்பூக்கள்தான். இதை பார்ப்பதற்கே கண்களுக்கு குளுமையாக இருக்கும். இந்தப் பூக்கள் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களில் கண்களைக் கவர்வதாக இருக்கும். இதன் அழகிய இதழ்கள் உங்கள் பால்கனி மற்றும் தோட்டம் இரண்டையும் அழகாக்கும். நீங்கள் உங்கள் வீட்டுக்கு சாமந்திப்பூக்களின் செடிகளை கொண்டு வந்தால் அது உங்கள் தோட்டத்தில் அதிக மலர்களை மலரச்செய்யும்.
ரோஜாப் பூக்கள்
ரோஜாப்பூக்கள் பூக்க கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும். ஆனால் அது பூக்கத் துவங்கிவிட்டால், அதன் மணம் உங்களை மயக்கும். அதில் பூக்களை விரைந்து பூக்கச் செய்வதற்கு, உங்கள் வீட்டுக்கு ஆரோக்கியமான செடியை வாங்கி வாருங்கள். அதில் 2 அல்லது 3 பூக்கள் இருந்தால் நல்லது. இதற்கு உரமிட்ட மண்ணை அடியில் சேர்க்கவேண்டும். இருவாரத்திற்கு ஒருமுறை உரமிடவேண்டும்.