மாடித்தோட்டத்தில் வளரக்கூடிய பழ வகைகள்! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மாடித்தோட்டத்தில் வளரக்கூடிய பழ வகைகள்! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

மாடித்தோட்டத்தில் வளரக்கூடிய பழ வகைகள்! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

Suguna Devi P HT Tamil
Published Oct 16, 2024 05:20 PM IST

நாம் உண்ணும் காய்கறிகள், பழங்கள் என அனைத்தும் செயற்கையான உரங்கள், செயற்கையான பதனிடுதல் முறை ஆகியவற்றின் வாயிலாகவே நமக்கு கிடைக்கின்றன.

மாடித்தோட்டத்தில் வளரக்கூடிய பழ வகைகள்! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!
மாடித்தோட்டத்தில் வளரக்கூடிய பழ வகைகள்! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!

நாம் உண்ணும் காய்கறிகள், பழங்கள் என அனைத்தும் செயற்கையான உரங்கள், செயற்கையான பதனிடுதல் முறை ஆகியவற்றின் வாயிலாகவே நமக்கு கிடைக்கின்றன. இயற்கையான காய்கள், பழங்கள் வேண்டும் என்றால் முழுக்க முழுக்க இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படவேண்டும். ஆனால் அப்படிப்பட்ட உணவுகளுக்கு நாமே விளைய வைத்தால் மட்டுமே முடியும். அப்படி விளைய வைக்க முடியும் என்பது மாடித்தோட்டங்களால் சாத்தியமாக்கப்பட்டு வருகிறது. நமது மாடித் தோட்டத்திலேயே வளர்க்க கூடிய பழங்களை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். 

தமிழ்நாட்டின் மிதவெப்ப நிலைக்கு ஏற்றவாறான பழங்களை மடித் தோட்டத்தில் விளைவிக்க வேண்டும். உதாரணமாக ஓரளவு தண்ணீரில் அதிக வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய பழங்களாக இருக்க வேண்டும்.  

சப்போட்டா 

நமது வீட்டில் உள்ள மாடித் தோட்டத்தில் சப்போட்டா பழங்களை வளர்ப்பது எளிமையான செயலாகும். முதலில் ஒரு பெரிய அகன்ற தொட்டியை தேர்வு செய்ய வேண்டும். அதில் சாதாரண மணல், கோக்கோ பிட் மற்றும் மாட்டு சாணம் ஆகியவற்றை கலந்து தொட்டியில் நிரப்ப வேண்டும். வீட்டில் இருந்து வரும் காய்கறி கழிவுகள், மண்புழு உரம், குச்சி தீவனம் ஆகிய உரங்களை பயன்படுத்த வேண்டும். இது அனைத்து சீசன்களிலும் பழங்களை தரக்கூடிய மரமாகும். 

மாதுளை 

ஒரு பெரிய அகன்ற தொட்டியை மாதுளை மரம் நட தேர்வு செய்ய வேண்டும். இதற்கு எருமை சாணம் மற்றும் செம்மண் கலந்த கலவையில் மாதுளை கன்றை நட வேண்டும். மாதுளை மரத்திற்கு தினம் தோறும் தண்ணீர் விட வேண்டும். உரங்கள் குறையும் போது போட வேண்டும். அதிக அளவிலான தண்ணீரை விட கூடாது. மாதுளையும் தமிழ்நாட்டின் வெப்பநிலையை தாங்கி வளரக்கூடிய ஒரு பழமாகும். 

வாழை 

தமிழ் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வாழை மரங்கள் வளரும் காலநிலையே நிலவுகிறது. அதிகமான மழைப்பொழிவை வாழைமரம் தாங்கி வளராது. முதலில் வாழை மரம் வளர்ப்பதற்கு பெரிய அளவிலான தொட்டி அல்லது டிரம்மை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் வாழைமரம் வளரும் போது அதன் கீழே சிறு கன்றுகள் வளர்ந்தால் அதனை பிடுங்கி விட வேண்டும். வாழை மரத்தில் இருந்து பழம், இலை, தண்டு என பல பொருட்கள் கிடைக்கின்றன.  இவை அனைத்தையும் வளர்ப்பதற்கு முதலில் சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் இதனை பராமரிக்க வேண்டும். இவ்வாறு வளர்த்து சுகாதரமான இயற்கையான பழங்களை நாம் வீட்டிலேயே எடுத்துக் கொள்ளலாம். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.