Food Adulteration : நீங்கள் சாப்பிடும் நெய்யில் பொய் கலந்துள்ளதா? எப்படி கண்டுபிடிக்கலாம் பாருங்கள்!
Food Adulteration : நீங்கள் சாப்பிடும் நெய்யில் பொய் கலந்துள்ளதா? எப்படி கண்டுபிடிக்கலாம் பாருங்கள். உங்கள் வீட்டில் உபயோகிக்கும் நெய் மற்றும் பாலில் உள்ள கலப்படத்தை கண்டுபிடிக்கும் எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உணவில் கலப்படம் என்பது காலங்காலமாக நடந்து வரும் ஒன்றுதான். வியாபாரிகள் அதிக லாபம் பெறுவதற்காக உணவில் இதுபோன்ற கலப்படங்களை செய்கிறார்கள். இதனால் இதைப் பயன்படுத்தும் மக்களுக்கு, அவற்றை தொடர்ந்து உட்கொள்ளும்போது எண்ணற்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் சிறுசிறு வழிகள் மூலர் வீட்டிலேயே நாம் அன்றாடம் பயன்படுத்தும் உள்ள கலப்படங்களை கண்டுபிடிக்கமுடியும். உங்களின் அன்றாட பயன்பாட்டில் பால் மற்றும் நெய் ஆகியவற்றி கலப்படம் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை முயற்சி செய்து பார்த்து உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பால் மற்றும் நெய் சுத்தமாக உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அவற்றை பரிசோதிப்பது எப்படி என்ற விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நெய்
நெய்யில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் வீட்டிலேயே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் வாங்கும் நெய் போலி என்பதை கண்டுபிடிக்க உங்களுக்கு கடைகளில் கிடைக்கும் டிங்சர் அயோடின் தேவை. இந்த டிங்சர் அயோடின் என்பது சிறிய ரத்த காயங்களுக்கு வெளிப்புறத்தில் இருந்து பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆகும். இதை நீங்கள் மருந்து கடைகளிலே வாங்கிக்கொள்ளலாம். இதனை நீங்கள் சிறிய ரத்த காயங்களின் மேல் வைத்தால் அது அப்போது கொஞ்சம் எரியும். பின்னர் காயத்தை ஆறவைத்து குணப்படுத்தும் தன்மை கொண்டது. இந்த டிங்சர் அயோடின் உங்கள் நெய் சுத்தமான நெய்யா அல்லது கலப்படமானதா என்பதை கண்டுபிடிக்க உங்களுக்கு உதவும்.
நீங்கள் வாங்கிய நெய்யில் கால் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் இந்த டிங்சர் அயோடினை இரண்டு சொட்டு விடவேண்டும். அதை நீங்கள் விட்டவுடன் அதன் நிறம் கருப்பாக மாறினால் அது கலப்படமான நெய் என்று பொருள். அதில் எவ்வித நிற மாற்றமும் ஏற்படவில்லையென்றால் அது சுத்தமான நெய் என்பதை கண்டுபிடிக்கலாம்.