Food Adulteration: திருப்பதி லட்டுல மட்டுமில்லை! உங்க வீட்டு பாலிலும் கலப்படம் தான்
Food Adulteration: சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் வழங்கப்பட்ட லட்டு செய்யப்பட்ட நெயில் கலப்படம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனை தொடர்ந்து இந்தியாவில் பல உணவுகளில் கலப்படம் செய்யப்படுவது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிக அளவிலான மக்கள் தொகைக்கு தேவையான உணவுப் பொருட்களின் தேவையும் நாளுக்கு நாள் இங்கு அதிகரித்து வருகிறது. மேலும் அதன் உற்பத்தி திறனை அதிகரித்தும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உணவிற்கு உள்ள டிமாண்ட் காரணமாக பல உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப் படுகின்றன. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் வழங்கப்பட்ட லட்டு செய்யப்பட்ட நெயில் கலப்படம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனை தொடர்ந்து இந்தியாவில் பல உணவுகளில் கலப்படம் செய்யப்படுவது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இது போன்று நாம் நாள் தோறும் உபயோகப்படுத்தும் எந்தெந்த உணவுகளில் கலப்படம் உள்ளது என இங்கு பார்ப்போம்.
கலப்படம் செய்யப்படும் பொருட்கள்
சில மாதங்களுக்கு முன்பு நாம் பயன்படுத்தும் பாலில் கலப்படம் செய்யப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. மேலும் இந்திய உணவு ஆணையம் பல பால் தயாரிக்கும் நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் சோதனை நடத்தியது. இது குறித்து பாலில் பெரும்பாலும் யூரியா, சோப்பு, சர்க்கரை மற்றும் வனஸ்பதி எண்ணெய் ஆகியவற்றில் கலப்படம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
கோதுமையில் பொதுவாக எர்காட் என்ற பூஞ்சை கலப்படம் செய்யப்படுகிறது. இதில் அதிக அளவிலான நச்சுப் பொருட்கள் உள்ளன. பேக்கேஜ் செய்யப்பட்ட மசாலாப் பொருட்களை விட, பேக்கேஜ் செய்யப்படாத மசாலாப் பொருட்களில் கலப்படம் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் தூளில் லீட் குரோமேட் எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது இரத்த சோகை, பக்கவாதம், மூளை பாதிப்பு மற்றும் கருச்சிதைவுகளை ஏற்படுத்தும்.