HT Tamil Book SPL: ‘எளிய நடை, மிதக்கும் நகைச்சுவை’- தமிழில் சிறுகதைக்காக சாகித்ய அகாடமி வென்ற முதல் எழுத்தாளரின் நூல்!
'அபார ஞாபகம்' கதையில் வரும் பிரதான கதாபாத்திரம், என்னதான் வாரிசுகளுடன் மோதல் போக்கைக் கொண்டிருந்தாலும், மனித மனம் குறிப்பாக தந்தையின் மனம் அவர்களுக்குத்தான் தனக்குப் பிறகு அனைத்து சொத்துகளும் சேர வேண்டும் என கருதுவதை நகைச்சுவையுடன் கலந்து எழுதியிருக்கிறார்.

HT Tamil Book SPL: ‘எளிய நடை, மிதக்கும் நகைச்சுவை’- தமிழில் சிறுகதைக்காக சாகித்ய அகாடமி வென்ற முதல் எழுத்தாளரின் நூல்! (Kalachuvadu)
'ராஜா வந்திருக்கிறார்'. இதுவொரு சிறுகதையின் தலைப்பு. தமிழில் சிறுகதைக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் கு.அழகிரிசாமி எழுதி ஒரு சிறுகதையின் தலைப்பு தான் இந்த 'ராஜா வந்திருக்கிறார்'. இதுவே இந்நூலின் தலைப்புமாக அமைந்திருக்கிறது. இந்நூலில் இவர் எழுதிய 18 சிறுகதைகள் உள்ளன. அதில் 'ராஜா வந்திருக்கிறார்' எனும் சிறந்த சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.
சில சிறுகதைகளை புரிந்து கொள்வது சற்று கடினமாக இருக்கும். ஆனால், மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தால் 'ஆஹா' என்ன இவ்வளவு சிறப்பாக எழுதியிருக்கிறார் என எண்ணம் தோன்றும்.
'ரச விகாரம்', 'கல்யாணகிருஷ்ணன்', 'குமாரபுரம் ஸ்டேஷன்', 'அன்பளிப்பு' உள்ளிட்ட கதைகள் மிகச் சிறப்பாக இருக்கின்றன.