வெந்தயக்கீரையை வீட்டிலே வளர்க்கலாம்! 30 நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும்! பராமரிப்பு குறிப்புகள் இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெந்தயக்கீரையை வீட்டிலே வளர்க்கலாம்! 30 நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும்! பராமரிப்பு குறிப்புகள் இதோ!

வெந்தயக்கீரையை வீட்டிலே வளர்க்கலாம்! 30 நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும்! பராமரிப்பு குறிப்புகள் இதோ!

Priyadarshini R HT Tamil
Published Oct 15, 2024 07:00 AM IST

வெந்தயக்கீரையை வீட்டிலே வளர்க்கலாம் பயன்பெற முடியும். 30 நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும். இந்த கீரையை வளர்க்கும்போது பராமரிப்பது எப்படி என்ற குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வெந்தயக்கீரையை வீட்டிலே வளர்க்கலாம்! 30 நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும்! பராமரிப்பு குறிப்புகள் இதோ!
வெந்தயக்கீரையை வீட்டிலே வளர்க்கலாம்! 30 நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும்! பராமரிப்பு குறிப்புகள் இதோ!

விதைத்தல்

வெந்தயக்கீரையின் விதைகளை வசந்த காலத்தில் விதைக்கவேண்டும். நல்ல பொலபொலவென்ற ஈரமான மண்ணில் வெந்தயத்தின் விதைகளை தூவவேண்டும். அந்த இடத்தில் முழு சூரியஒளி படவேண்டும். மண்ணில் விதையை தூவிவிட்டு, மேல கொஞ்சம் மண்ணை தூவி மூடவேண்டும். தண்ணீரை தெளித்துவிடவேண்டும். செடிகள் முளைக்கத் துவங்கும். 20 முதல் 20 நாளில் அறுவடை செய்துகொள்ளலாம்.

வசந்த காலத்தின் துவக்கத்தில் வெந்தயக்கீரையை நடவேண்டும்

வெந்தயம் வளர்வதற்கு மண்ணில் ஈரப்பதமும், கொஞ்சம் சூடான சூழலும் நிலவவேண்டும். எனவே விதைக்கும் வேலையை வசந்த காலத்தில் செய்யவேண்டும். நீங்கள் குளுமையான பகுதியில் வசிப்பவர் என்றால், நீங்கள் வெந்தயத்தை வசந்த காலம் துவங்கும் முன்னரே விதைக்க வேண்டும். வீட்டுக்குள்ளே வைத்து, பனித்துவங்கும் 5 வாரங்களுக்கு முன் விதைக்கலாம். இலையுதிர் காலத்தின் துவக்கத்திலும் வெந்தயத்தை வளர்க்கலாம்.

தொட்டி அல்லது தோட்டம்; செடி செழித்து வளர வெயில் வேண்டும்

வெந்தயக் கீரையை விதைத்து பராமரிப்பது எளிது. சிறிய அல்லது பெரிய தொட்டிகள், அலுமினிய ட்ரேக்கள் என எதில் வேண்டுமானாலும் வளர்க்கலாம். வெந்தயக்கீரை வளர்க்கும் இடத்திற்கு முழு சூரிய ஒளி கிடைக்கவேண்டும். அதற்கு ஒரு நாளில் 6 மணி நேரம் சூரிய வெளிச்சம் கட்டாயம் கிடைக்கவேண்டும்.

வெந்தயக்கீரையை நீங்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் பறித்து நட்டு வளர்க்க முடியாது. எனவே ஒரே இடத்தில் அது வளர இடம் தேர்வு செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு இடம் கிடைக்கவில்லையென்றால் மக்கக்கூடிய பையில் வைத்து வளருங்கள். பின்னர் தேவைப்படும் இடத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். பையுடனே மாற்றிக்கொள்ளலாம். பையும் மண்ணில் மக்கிவிடும். வெந்தயத்துக்கு முழு சூரிய ஒளி கிடைக்காவிட்டாலும், கொஞ்சம் கிடைத்தாலும் போதும் அதில் வளர்க்க முடியும்.

விதை தேர்வு

நீங்கள் நல்ல விதைகளை கடைகளில் அல்லது ஆன்லைனில் தேடி வாங்கிக்கொள்ளுங்கள்.

மண்ணை தயார்படுத்துவது

தோட்டத்தில் விதைத்தால், ஆழக்குழி தோண்டி, இடத்தை நன்றாக உழுது மண்ணை நன்றாக பொலபொலவெனவாக்கி, அதில் இயற்கை உரமிடவேண்டும். இது கீரை செழித்து வளர உதவும்.

தொட்டியில் விதைத்தால், அதில் தண்ணீர் வழிந்தோடும் துவாரம் இருக்கவேண்டும். அதில் உரத்தை கலந்து, வெயில்படும் இடத்தில் வைத்து, தண்ணீர் வடியும் இடத்தில் வைத்து, விதைகளை தூவவேண்டும்.

தோட்டத்தில் நடும்போது மண்ணின் அமிலத்தன்மைகளை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

விதை நேர்த்தி

ஓரிரவு ஊறவைத்து விதை நேர்த்தி செய்வது விதைகளை நன்றாக முளைக்கச் செய்யும். சாதாரண தண்ணீர் ஊற்றி ஓரிரவு ஊறவைத்து தண்ணீரை வடிகட்டிவிடவேண்டும்.

விதையை தூவுதல்

நீங்கள் வெந்தயக்கீரை வளர்க்கிறீர்கள் என்றால், தொட்டி அல்லது தோட்டம் எதில் வேண்டுமானாலும் வளர்க்கலாம். அதில் விதைகளை சரியான இடைவெளியில் தூவிவிடவேண்டும். ஒன்றன்மேல் ஒன்றாக விதைகள் விழாமல் பரவலாகத் தூவினால்தான் அவை நன்றாக வளரும்.

மண்ணை வைத்து மூடவேண்டும்

வெந்தய விதைகளை ஆழத்தோண்டி விதைக்க வேண்டிய தேவையில்லை. அதை மண்ணை தூவி மூடினாலே போதும். இது பறவைகள் அல்லது மற்ற விலங்குகள் இதை சாப்பிடவதை தடுக்கும்.

தண்ணீர்

மண் சமஅளவு ஈரமாக அனைத்து புறங்களிலும் சமமாக தண்ணீர் ஊற்றவேண்டும். அதிகப்படியான தண்ணீர் விரைந்து வெளியேற வழிவகை செய்யவேண்டும். 8 நாளில் முளைக்க துவங்கிவிடும். மண்ணில் எப்போதும் ஈரப்பதம் இருந்தால்தான் வெந்தயக்கீரை செழித்து வளரும். எனவே மண்ணை தொட்டுப்பார்த்தால் காய்ந்திருந்தால் உடனே தண்ணீர் ஊற்றவேண்டும். அதிகம் தண்ணீரும் ஊற்றிவிடக் கூடாது. அதிக தண்ணீர் வேலை அழுகச் செய்யும் அல்லது நோய் தொற்றுகளை ஏற்படுத்தும்.

பராமரிப்பு

பூச்சி தொற்றுகள் அல்லது இலைகள் மஞ்சளானால் அதற்கு இயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தவேண்டும். வேர் அழுகல் போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பார்த்து மண் மற்றும் தாவரத்தை சரிபார்க்கவேண்டும். கற்றோட்டமும், நல்ல வடிகாலும் கொண்ட இடத்திற்கு செடியை மாற்றவேண்டும். வேப்ப எண்ணெயையும் நோய் தொற்றுக்கு பயன்படுத்தலாம். 30 நாளில் அறுவடை செய்துகொள்ளலாம். செடி 6 இன்ச் வளர்ந்தால் அறுவடைக்கு ஏற்றது என்று பொருள். கத்தரிக்கோல் வைத்து மேல்புறத்தில் கொஞ்சம் மட்டும் நறுக்கி எடுத்து ஃபிரஷ் இலைகளை சப்பாத்தி, கிரேவிகளில் பயன்படுத்தலாம். பின்னர் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும்.