வெந்தயக்கீரையை வீட்டிலே வளர்க்கலாம்! 30 நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும்! பராமரிப்பு குறிப்புகள் இதோ!
வெந்தயக்கீரையை வீட்டிலே வளர்க்கலாம் பயன்பெற முடியும். 30 நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும். இந்த கீரையை வளர்க்கும்போது பராமரிப்பது எப்படி என்ற குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வெந்தயக்கீரை என்பது இந்தியில் மேத்தி என்று அழைக்கப்படுகிறது. மத்திய தரைக்கடல் பகுதிகளில் வளரக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தாவரமாகும். அதன் இலைகள் மற்றும் விதைகள் இரண்டும் சமையல் மற்றும் அழகு சாதன பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்ததால் இது மூலிகைகள் பட்டியலில் உள்ளது. நீங்களே வீட்டில் வெந்தயக் கீரையை வளர்த்துவிட முடியும். வீட்டுத்தோட்டம் அல்லது தொட்டியிலே எளிதாக வளர்த்து விடலாம். வெந்தயத்தை கொஞ்சம் எடுத்து பொலபொலப்பான மண்ணில் தூவி, தண்ணீர் தெளித்துவர வெந்தயக் கீரை முளைத்து வரும். வெந்தயக் கீரையை வீட்டில் வளர்ப்பது எப்ப என்று தெரிந்துகொள்ளுங்கள். அதை பாதுகாப்பாக வளர்த்து கீரையை அறுவடை செய்வது எப்படி என்றும் பாருங்கள்.
விதைத்தல்
வெந்தயக்கீரையின் விதைகளை வசந்த காலத்தில் விதைக்கவேண்டும். நல்ல பொலபொலவென்ற ஈரமான மண்ணில் வெந்தயத்தின் விதைகளை தூவவேண்டும். அந்த இடத்தில் முழு சூரியஒளி படவேண்டும். மண்ணில் விதையை தூவிவிட்டு, மேல கொஞ்சம் மண்ணை தூவி மூடவேண்டும். தண்ணீரை தெளித்துவிடவேண்டும். செடிகள் முளைக்கத் துவங்கும். 20 முதல் 20 நாளில் அறுவடை செய்துகொள்ளலாம்.
வசந்த காலத்தின் துவக்கத்தில் வெந்தயக்கீரையை நடவேண்டும்
வெந்தயம் வளர்வதற்கு மண்ணில் ஈரப்பதமும், கொஞ்சம் சூடான சூழலும் நிலவவேண்டும். எனவே விதைக்கும் வேலையை வசந்த காலத்தில் செய்யவேண்டும். நீங்கள் குளுமையான பகுதியில் வசிப்பவர் என்றால், நீங்கள் வெந்தயத்தை வசந்த காலம் துவங்கும் முன்னரே விதைக்க வேண்டும். வீட்டுக்குள்ளே வைத்து, பனித்துவங்கும் 5 வாரங்களுக்கு முன் விதைக்கலாம். இலையுதிர் காலத்தின் துவக்கத்திலும் வெந்தயத்தை வளர்க்கலாம்.