முருங்கை மட்டன் குழம்பு; தீபாவளி காலையில் சுடச்சுட இட்லியுடன், சூடாக சாப்பிட, கொண்டாட்டங்கள் களைகட்டும்!
முருங்கை மட்டன் குழம்பு, தீபாவளி காலையில் சுடச்சுட இட்லியுடன், சூடாக சாப்பிட, கொண்டாட்டங்கள் களைகட்டும். பிறகென்ன, வைத்து சாப்பிடுங்கள்.

தீபாவளி நெருங்கிவிட்டது. புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள் என கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டது. தீபாவளி நாளன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, புத்தாடைகள் உடுத்தி, மத்தாப்பூக்கள் கொழுத்தி மகிழ்ந்திருப்பீர்கள். அன்று காலையில் இட்லியுடன் சாப்பிட மட்டன் குழம்பு இல்லாவிட்டால் எப்படி? எனவே தீபாவளியன்று காலையில் முருங்கை, மட்டன் குழம்பு தயாரிப்பது எப்படி என்று பாருங்கள். பொதுவாகவே மட்டன் குழம்பில் கத்தரிக்காள், முள்ளங்கி போன்ற காய்கறிகள்தான் பெரும்பாலும் சேர்ப்பார்கள். ஆனால், இங்கு முருங்கைக்காய் சேர்த்து செய்யப்படும் மட்டன் குழம்பு என்றால் அத்தனை ருசி நிறைந்ததாக இருக்கும். இதை நீங்கள் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். எனவே கட்டாயம் இந்த தீபாவளிக்கு இந்த குழம்பை செய்து சாப்பிட்டு பாருங்கள்.
தேவையான பொருட்கள்
எலும்போடு மட்டன் – கால் கிலோ
தக்காளி – 2