ஆரோக்கிய பானம்: உடலுக்கு குளிர்ச்சி.. சருமத்தின் வறட்சியை போக்கும் அற்புத கோடை கால பானம்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆரோக்கிய பானம்: உடலுக்கு குளிர்ச்சி.. சருமத்தின் வறட்சியை போக்கும் அற்புத கோடை கால பானம்

ஆரோக்கிய பானம்: உடலுக்கு குளிர்ச்சி.. சருமத்தின் வறட்சியை போக்கும் அற்புத கோடை கால பானம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 02, 2025 05:55 PM IST

Chandana drink: சந்தன சிரப் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. இந்த சிரப்பை குடிப்பதால் வெயில் மற்றும் நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். கோடையில் வயிறு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது. உங்கள் உணவில் சந்தன சிரப்பை சேர்ப்பதன் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்

உடலுக்கு குளிர்ச்சி.. சருமத்தின் வறட்சியை போக்கும் அற்புத கோடை கால பானம்
உடலுக்கு குளிர்ச்சி.. சருமத்தின் வறட்சியை போக்கும் அற்புத கோடை கால பானம்

கோடை காலம் தொடங்கும்போது, ​வெப்பத்தை தணித்து உடல் குளிர்ச்சியை பெறுவதற்கு பொது ​மக்கள் மோர், லஸ்ஸி, இளநீர், எலுமிச்சை சாறு போன்ற பல வகையான குளிர்ச்சி தரும் பானங்களை பருகுகிறார்கள். இந்த பானங்கள் அனைத்தும் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உடலை நீரிழப்பிலிருந்து பாதுகாக்கவும் செய்கின்றன.

இந்த பானங்கள் ஆரோக்கியத்துக்கும் நன்மை விளைவிக்கிறது. இந்த ஆரோக்கிய பானங்களின் வரிசையில் கோடை காலத்தில் பருக கூடிய பானங்களில் சிலர் சந்தன சிரப்பைச் பருகுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பானம் குடிக்க மிகவும் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது.

சந்தன சிரப் கோடையிலில் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், உடல் நீரிழப்பு ஏற்படுவதை தடுக்கவும் செய்கிறது. இந்த பானம் கோடை காலத்தில் வயிறு தொடர்பாக ஏற்படும் பல்வேறு நோய் பாதிப்புகளை தடுக்க உதவுகிறது. சந்தன சிரப்பை உணவில் சேர்ப்பதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்

கோடையில் ஏன் சந்தன பானம் பருக வேண்டும்?

சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. எனவே சந்தனத்தை வைத்து சுவையான சாறு தயாரித்து குடிக்கலாம். இது உடல் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கு உதவுகிறது இதன் காரணமாக, உடலில் வெப்பம் சீரான நிலையில் இருக்கும். மேலும், நீரிழப்பு பிரச்சினையும் ஏற்படாது. சந்தனத்தின் குளிர்ச்சியான பண்புகள் உங்களை வெயிலில் வெப்ப தாக்கத்தில் இருந்து பாதுகாக்கின்றன.

சந்தன சிரப் தயாரிப்பது எப்படி

சந்த சிரப் தயார் செய்வதற்கு சந்தனப் பொடி மற்றும் குங்குமப்பூ பூக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டுமே உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. மேலும் குங்குமப்பூ ஒற்றைத் தலைவலியைக் குறைக்கிறது.

சந்தன சிரப் செய்முறை

கால் ஸ்பூன் சந்தனப் பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் நான்கு குங்குமப்பூ இதழ்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

சந்தனப் பொடி, குங்குமப்பூ பூ இதழ்கள், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து கலக்கவும்.

இந்த கலவையில் சிறிய பழத் துண்டுகளை ஏதாவது சேர்க்கலாம். இந்த பானம் பருகுவதற்கு முன் ஐஸ் கட்டிகளை சேர்த்து கொள்ளலாம். அவ்வளவுதான், ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த சந்தன சிரப் தயார்

சந்தன சிரப்பில் ஒளிந்திருக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்

செரிமானத்தை மேம்படுத்துகிறது

சந்தன சிரப்பைக் குடிப்பது அமிலத்தன்மை, எரிச்சல் மற்றும் அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. செரிமான அமைப்பை ஆற்றுப்படுத்தி வைத்திருப்பதன் மூலம் உணவை ஜீரணிக்க உதவுகிறது.

சந்தன சிரப்பை தொடர்ந்து குடிப்பது சருமத்தை மேம்படுத்துகிறது. இது வெப்பத் தடிப்புகள் மற்றும் சொறிகளைத் தடுக்கிறது. சந்தன சிரப் குடிப்பது மன அழுத்தம், பதட்டம் மற்றும் மன சோர்வைக் குறைக்கிறது.

சிறுநீர் பிரச்னைகளில் இருந்து நிவாரணம்

சந்தன சிரப் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைக் குறைக்க உதவுகிறது. அதன் குளிர்ச்சியான பண்புகள் சிறுநீர் மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. எனவே, கோடையில் வாரத்துக்கு இரண்டு முதல் மூன்று முறை சந்தன சிரப் குடிப்பது நல்லது

குறிப்பு: இந்த தகவல் பொது அறிவு மற்றும் இணையத்தில் காணப்படும் தகவல்கள், ஆய்வுகள் மற்றும் சுகாதார இதழ்களிலிருந்து சேகரிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. இது மருத்துவம் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. இந்த தகவல் முற்றிலும் உண்மை என்று இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் கூறவில்லை. விரிவான மற்றும் துல்லியமான தகவலுக்கு தொடர்புடைய நிபுணர்களைத் தொடர்பு கொள்ளவும்.உங்கள் உடல்நலம் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்