இட்லி மாவு இல்லையா? எதுக்கு கவலை? உடனே செய்யலாம் ஓட்ஸ் இட்லி! சத்தான பிரேக்பாஸ்ட் ரெசிபி!
காலையில் அனைவரும் சாப்பிடும் பிரதான உணவாக இட்லி இருந்து வருகிறது. சில சமயங்களில் இட்லி மாவு இல்லாமல் போகலாம். அது போன்ற சமயங்களில் வெளியே மாவு வாங்காமல் நாமே எளிமையாக மாவு செய்யலாம். சத்தான ஓட்ஸ் வைத்து சுவையான இட்லி செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

தமிழ்நாட்டில் பெரும்பாலானவரின் வீட்டில் காலை உணவாக இருப்பது இட்லி தான். இட்லி என்றால் அனைவருக்கும் மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஒரு உணவாகவும் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அதிக ஹோட்டல்களில் இட்லியை காலை உணவாக இருந்து வருகிறது. இட்லி காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சாப்பிடக்கூடிய உணவாகவும் இருக்கிறது. இத்தகைய இட்லியை செய்வதற்கு நாம் முந்தைய நாள் இரவே அரிசியை ஊறவைத்து மாவை அரைத்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் மாவு நன்கு புளித்து இட்லி சிறப்பாக வரும். சில சமயங்களில் நமக்கு இருக்கும் வேலைப்பளு காரணமாக இட்லி மாவு அரைக்காமல் இருப்போம்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் வெளியில் கடைகளில் விற்கும் இட்லி மாவினை சிலர் வாங்கி சமைப்பார்கள். ஆனால் கடைகளில் விற்கப்படும் எல்லா இட்லி மாவும் சுத்தமான மற்றும் சரியான முறையில் அரைக்கப்பட்டு இருக்காமல் இருக்கலாம் . இதனை தவிர்க்க நாம் வீட்டில் உள்ள மாவினை பயன்படுத்துவதே சிறப்பான வழியாகும். ஆனால் மாவினை அரைக்காமல் இருக்கும் பட்சத்தில் எளிமையாக உடனடியாக செய்யக்கூடிய இட்லிகள் உள்ளன. அதுதான் சத்தான ஓட்ஸை வைத்து சுவையான இட்லி செய்ய முடியும். இதனை செய்வதும் மிகவும் எளிமை தான். உடனடியாக செய்யக்கூடிய இந்த ஓட்ஸ் இட்லி செய்முறையை தெரிந்து கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
