'சிறுதானியங்களை சமைக்கும்போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க’: மருத்துவர் அருண் கார்த்திக் பேட்டி
சிறுதானியங்களை சமைக்கும்போது எவ்வாறு அதனைப் பின்பற்ற வேண்டும் என மருத்துவர் அருண் கார்த்திக் பேட்டிளித்துள்ளார்.

சிறுதானியங்களை சமைக்கும்போது இந்தத் தவறுகளை செய்யாதீர்கள் என மருத்துவர் அருண் கார்த்திக் கூறியிருக்கிறார்.
சிறுதானியங்களை எப்படி உண்ணவேண்டும் என்பது பற்றி மருத்துவர் அருண் கார்த்திக், அவரது யூடியூபில் பிப்ரவரி 17, 2023-ல் கூறியிருப்பதாவது, ‘’நெல் முதலில் உமியுடன் வருகிறது. அதற்குள் இருப்பது தான் அரிசி. அது மூன்று படிநிலைகளாக உள்ளது. முதலில் இருப்பது பிரான் (Bran). அடுத்து இருப்பது எண்டோஸ்பெர்ம். அடுத்து இருப்பது ஜெர்ம்.
அது மாதிரி தான், சிறுதானியங்கள் என்று சொல்லக்கூடிய தினை, வரகு, சாமை, குதிரை வாலியிலும் மூன்று நிலைகள் உள்ளன. இதில் பிரச்னை என்னவென்றால், பழுப்பு அரிசி என்று சொல்லக்கூடிய கைக்குத்தல் அரிசியில் முதலில் இருக்கக் கூடிய முதல் படியை மட்டும் நீக்கிவிட்டு, அடுத்து இரண்டு நிலைகளோடு வருவது தான் கைக்குத்தல் அரிசி விற்பனைக்கு வருகிறது.