உங்களை பாடாய் படுத்தும் கொசு தொல்லையால் அவதியா.. உங்க வீட்டு பால்கனியில் இந்த 4 செடிகளை வளர்த்து பாருங்க!
வீட்டு பால்கனியில் சில பிரத்யேக செடிகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களை விரட்டலாம். சில தாவரங்களின் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது. குறிப்பாக டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களை விரட்ட இந்த செடிகளை வளர்க்க வேண்டும்.

பொதுவாக மழை காலங்களில் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். கொசுக்களால் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் சவால் நிறைந்ததாக உள்ளது. நாம் வீட்டில் எவ்வளவுதான் கவனித்தாலும் கொசுக்கள் வருவது நிற்காது. கொசுவத்தி சுருள்கள், கொசு விரட்டி கிரீம் என கொசுக்களை விரட்ட பல பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க, சில வகையான தாவரங்களை வீட்டில் வளர்க்க வேண்டும்.
வீட்டை முறையாக சுத்தம் செய்தல், ஜன்னல் கதவுகளை மூடி வைப்பது, கொசு வலைகளை அமைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் கொசுக்கள் வீட்டிற்குள் வராது. வீட்டு பால்கனியில் சில பிரத்யேக செடிகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களை விரட்டலாம். சில தாவரங்களின் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது. குறிப்பாக டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களை விரட்ட இந்த செடிகளை வளர்க்க வேண்டும்.
எலுமிச்சை புல் செடி
அதன் மென்மையான வாசனைக்கு பெயர் பெற்ற எலுமிச்சை புல் கொசுக்களை உங்கள் வீட்டிலிருந்து விலக்கி வைக்க உதவும். இது பல இயற்கை கொசு விரட்டும் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில், இதன் வாசனை உங்கள் மனநிலையை புதுப்பிக்கிறது. லெமன் புல் இருக்கும் இடத்தில் கொசுக்கள் இருக்காது. கொசுக்களுக்கு அவற்றின் வாசனை பிடிக்காது. இதனால் கொசுக்கள் எலுமிச்சை புல்லை விட்டு ஓடுகின்றன. அதனால்தான் உங்கள் பால்கனியில் வளர்க்க இது ஒரு நல்ல தாவரமாக இருக்கும்.