பக்காவான டேஸ்ட்டில் பன்னீர் புலாவ் மட்டும் செஞ்சு பாருங்க! அப்றம் சுத்தமா காலி ஆகிடும்! இதோ சிம்பிள் ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பக்காவான டேஸ்ட்டில் பன்னீர் புலாவ் மட்டும் செஞ்சு பாருங்க! அப்றம் சுத்தமா காலி ஆகிடும்! இதோ சிம்பிள் ரெசிபி!

பக்காவான டேஸ்ட்டில் பன்னீர் புலாவ் மட்டும் செஞ்சு பாருங்க! அப்றம் சுத்தமா காலி ஆகிடும்! இதோ சிம்பிள் ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Published May 08, 2025 02:04 PM IST

அசைவ உணவுகளுக்கு மாற்றாக செய்யப்படும் உணவுகளில் ஒன்றாக பன்னீர் இருந்து வருகிறது. கறி வைத்து சமைகக் கூடிய அனைத்து விதமான உணவுகளும் இந்த பன்னீர் வைத்தும் சமைக்கப்படும். இன்று பன்னீர் புலாவ் செய்வது எப்படி என இங்கு பார்க்கப்போகிறோம்.

பக்காவான டேஸ்ட்டில் பன்னீர் புலாவ் மட்டும் செஞ்சு பாருங்க! அப்றம் சுத்தமா காலி ஆகிடும்! இதோ சிம்பிள் ரெசிபி!
பக்காவான டேஸ்ட்டில் பன்னீர் புலாவ் மட்டும் செஞ்சு பாருங்க! அப்றம் சுத்தமா காலி ஆகிடும்! இதோ சிம்பிள் ரெசிபி!

தேவையான பொருட்கள்

2 கப் பாஸ்மதி அரிசி

ஒரு கப் பன்னீர்

1 கப் பச்சை பட்டாணி

3 டேபிள்ஸ்பூன் நெய்

1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

1 பட்டை

2 கிராம்பு

2 ஏலக்காய்

1 அன்னாசி பூ

1 ஜாதிபத்திரி

1 டீஸ்பூன் சீரகம்

2 பிரியாணி இலை

2 பெரிய வெங்காயம்

4 பச்சை மிளகாய்

2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

3 தக்காளி

கால் கப் தயிர்

1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

2 டீஸ்பூன் மிளகாய் தூள்

1 டீஸ்பூன் சீரக தூள்

1 டீஸ்பூன் மல்லி தூள்

1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்

உப்பு

ஒரு கொத்து புதினா இலை

ஒரு கொத்து கொத்தமல்லி இலை

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் நன்கு கழுவிய பாஸ்மதி அரிசியை சேர்த்து தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும். அடுத்து பன்னீரை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து, பன்னீரை வைத்து எல்லா பக்கங்களையும் திருப்பி விட்டு வறுக்கவும். அடுத்து ஒரு குக்கரில் நெய், எண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, ஜாதிபத்திரி, சீரகம், பிரியாணி இலை, சேர்க்கவும்.

பிறகு மெல்லியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும். அடுத்து தயிர், மிளகாய் தூள், சீரக தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். இப்போது பச்சை பட்டாணி, புதினா இலை, கொத்தமல்லி இலை, வறுத்த பன்னீர், ஊறவைத்த பாஸ்மதி அரிசி ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து நன்கு கலந்து விடவும். அடுத்து தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட்டு 1 விசில் வரும் வரை வேகவிடவும். சுவையான பன்னீர் புலாவ் தயார்.