இந்த 7 பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது ஏன் தெரியுமா?.. ஒருவேளை தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் பாருங்க!
பழங்கள் ஆரோக்கியமானவை. பழங்களை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால் சில பழங்களின் சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் ஆபத்துகள் ஏற்படலாம். குறிப்பாக இந்த 7 வகை பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்தக்கூடாது.

பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்துக்கும் தண்ணீர் என்பது அவசியம். உணவு இல்லாமல் கூட சில காலம் வாழ்ந்து விடலாம். ஆனால், தண்ணீர் நம் வாழ்வில் அத்தியாசவசியமான ஒன்றாகும். தண்ணீர் இல்லையென்றால் வாழமுடியாது என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே. அப்படிப்பட்ட தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும் என்பதற்கு சில விதிகள் உள்ளன. இந்த விதியை பின்பற்றாவிட்டால் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், சில பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும். அப்படிப்பட்ட பழங்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா..
தர்பூசணி
கோடையில் சுவையான தர்பூசணி சாப்பிட விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். உண்மையில் இதை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த தர்பூசணியில் உள்ள நார்ச்சத்து உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், தர்பூசணியில் அதிக அளவு இயற்கை சர்க்கரை ஃப்ரக்டோஸ் உள்ளது. எனவே, தர்பூசணி சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தர்பூசணியை உட்கொண்ட உடனே தண்ணீரை குடித்தால் செரிமான செயல்முறையை மெதுவாக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
வாழைப்பழம்
ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழம் வாழைப்பழம். மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த பழத்தில் ஏராளமான கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, மற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இருந்தாலும், வாழைப்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. அதோடு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் பாதிக்கிறது. எனவே, வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு குறைந்தது 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்.