குழந்தைகளையும் விட்டுவைக்காத நரை முடி! பின்னணியில் உள்ள காரணங்கள் என்னத் தெரியுமா?
இருபது மற்றும் முப்பது வயதுகளில் உள்ளவர்கள் தங்கள் வெள்ளையான தலைமுடியை மறைக்க பல விதமான முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால் இளம் குழந்தைகளின் தலைமுடியே தற்போது வெள்ளையாகி வருகிறது. இது இந்த நாட்களில் மிகவும் பொதுவானதாகி வருகிறது. இது ஏன் நடக்கிறது என காண்போம்.

ஒரு காலத்தில், 50 வயது வரை யாருக்கும் வெள்ளை முடி தவருவதில்லை. ஆனால் தற்போது உள்ள இளைய தலைமுறையினர் மத்தியில் முடி நரைக்கும் பிரச்சனை அதிகரித்து வருவதால், சாயம் பூசுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 20 அல்லது 30 வயதுகளில் இருப்பவர்களின் தலைமுடி வெள்ளையாக மாறுகிறது. அவர்களும் இயற்கையான ஹென்னா, செயற்கையான டை போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறு குழந்தைகளில் கூட, முடி வெண்மையாக்கும் பிரச்சனை உள்ளது, குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் முடி வெள்ளையாக மாறி விட்டது. இது பெற்றோருக்கு தொந்தரவாக உள்ளது.
மரபணு காரணிகள்
குழந்தைகளில் முடி வெண்மையாக்கப்படுவதற்கு மிகப்பெரிய காரணம் மரபணு. பெற்றோர் அல்லது குடும்பத்தில் யாருக்காவது இளம் வயதிலேயே வெள்ளை முடி வருவதற்கான பிரச்சனை இருந்தால், அவர்களின் குழந்தைகளுக்கும் மிக இளம் வயதிலேயே தலைமுடி வெண்மையாகும் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். இது முடிக்கு நிறத்தை அளிக்கும் மெலனின் உற்பத்தியின் குறைபாட்டால் ஏற்படும் ஒரு செயல்முறையாகும். எனவே, மரபணு காரணங்களால், குழந்தைகளின் முடி வெள்ளையாக மாறும்.