கோடையில் உலர் பழங்கள் சாப்பிடுவது ஆபத்தா?.. குழந்தைகளுக்கு எத்தனை நட்ஸ் கொடுக்கலாம்? - விபரம் இதோ!
உலர் பழங்கள், நட்ஸ் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் கோடையில் இவற்றை குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு கோடையில் எத்தனை உலர் பழங்கள் அல்லது நட்ஸ் கொடுக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

கோடையில் உலர் பழங்கள் சாப்பிடுவது ஆபத்தா?.. குழந்தைகளுக்கு எத்தனை நட்ஸ் கொடுக்கலாம்? - விபரம் இதோ!
உலர் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நட்ஸ் மிகவும் முக்கியமானது. இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள், நாள் முழுவதும் ஆற்றலை அளித்து, நோய்களுடன் போராடும் சக்தியை அளிக்கிறது. ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக இருந்தாலும், உலர் பழங்கள் உடலுக்கு சூட்டை அதிகரிக்கும். எனவே, அவற்றை கவனமாக சாப்பிட வேண்டும்.
கோடையில் உலர் பழங்கள், நட்ஸ்களை அதிகமாக எடுத்துக் கொள்வதால் நன்மைக்குப் பதிலாக ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும். எனவே, கோடையில் குழந்தைகளுக்கு எத்தனை உலர் பழங்கள், நட்ஸ் கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு தாயும் அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் வயதைப் பொறுத்து கோடையில் நட்ஸ் கொடுக்க வேண்டும்.
2-5 வயது குழந்தைகளுக்கு
பாதாம் பருப்பு : இரண்டு