தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Devastating Abortions - Teenage Victims In India - Study Says Shock - Doctors Advise

கருச்சிதைவு ஏற்படுத்தும் மனச்சிதைவு-இந்தியாவில் பலியாகும் இளம்பெண்கள்-ஆய்வு கூறும் அதிர்ச்சி-மருத்துவர்கள் அறிவுரை

Priyadarshini R HT Tamil
May 30, 2023 03:22 PM IST

கருச்சிதைவு தாயின் உடல் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுகிறது. கருச்சிதைவுக்கு பின் பெண்களின் மன ஆரோக்கியத்தை பராமரிப்பது எப்படி? வல்லுனர்கள் கூறும் அறிவுரைகள் என்ன?

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

குறிப்பிட்ட காரணங்களுக்கு கருச்சிதைவுகள் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும், அது செய்யப்படும்போது பெண்களுக்கு போதிய அன்பும், ஆறுதலும் நிச்சயம் கிடைக்க வேண்டும்.

அண்மையில் இந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வு கூறுகின்றன, மூன்றில் இரண்டு பங்கு கருச்சிதைவுகள் பாதுகாப்பின்றி செய்யப்படுகின்றன. குறிப்பாக பீகார், ஹரியானா, பஞ்சாப், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவில் உள்ள கிராமப்புறங்களில் இந்தக்கொடுமைகள் அதிகளவில் நடைபெறுவதாக கூறுகிறது. இன்றும் பெண் கருக்கொலை அதற்கு முக்கிய காரணமாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதைத்தவிர பிற காரணங்களையும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

மோசமான சமூக, பொருளாதார பண்புகள், ஆரோக்கியமற்ற நடத்தை, இளைஞர்களிடம் உள்ள தவறான உடலுறவு பழக்க வழக்கங்கள், கல்வியின்மை, குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, ஆண் குழந்தை வேண்டும் என்ற பழம்பெரும் பழக்கவழக்கம் இவையனைத்தும் பெண்களின் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்குகின்றன.

15 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு இந்த கருச்சிதைவுகள் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. குறிப்பிட்ட வயதுக்கு முன்னர் உடலுறவு வைத்துக்கொள்வது, தவறான உடலுறவு பழக்க வழக்கங்கள், கருத்தடை சாதனங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை இவையெல்லாம் இளம்பெண்களை கருச்சிதைப்புக்கு கட்டாயப்படுத்துகிறது. இந்தியாவில் கருச்சிதைவு சட்டமாக இருந்தபோதும், இந்தியாவில் பாதுகாப்பற்ற கருச்சிதைவுகள் நடக்கிறது என்பது அதிர்ச்சியான தகவலாக உள்ளது. இதற்கு பொருளாதாரம், சுகாதார சேவைகள் போதைமை இரண்டும் முக்கிய காரணங்களாகின்றன. இதனால், பெண்களின் உயிருக்குத்தான் ஆபத்து ஏற்படுகிறது.

பெண்களுக்கு கருச்சிதைவு உடல் மற்றும் மன பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. நமது நாட்டில் திருமணம், தொடர்ந்து குழந்தை பிறப்பு, குழந்தை பிறக்காவிட்டால் அதனால் எதிர்கொள்ளும் சமூக நிகழ்வுகள், தாய்மைக்கு இந்தியாவில் கொடுக்கப்படும் புனித தன்மை ஆகிய அனைத்தும் பெண்களுக்கு குழந்தை பிறக்காமல் போவதை ஒரு பெரும் பிரச்னையாக மாற்றுகின்றன. தாயாக முடியாத ஒரு பெண் நமது சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகளே அவர்களுக்கு பெரும் மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன. 

கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு நம் நாட்டில் மருத்துவ உதவிகளே எளிதாக கிடைக்காத நிலையில், அவர்களுக்கு கவுன்சிலிங் கிடைக்கப்பெறுவதெல்லாம், மிகச்சிறு அளவாகத்தான் இருக்க முடியும். அதுவும் பொருளாதாரம், வாழும் இடம், வாழ்க்கை முறை ஆகியவை சார்ந்ததாக அது இருக்கிது.

கருச்சிதைவோ, கருக்கலைப்போ செய்த தாய்மார்களுக்கு தேவைப்படுவதெல்லாம், நல்ல சத்தான உணவு, உடற் பயிற்சி, யோகா, தியானம், ஊக்கமளிக்கும் உறவுகள், கணவர், குடும்பத்தினர், நண்பர்களின் ஆதரவு, ஓய்வு, அமைதி, மன அழுத்த மேலாண்மை, கோயிலுக்கு செல்வது, வழிபாடு நடத்துவது, மனநல ஆலோசகர்களிடம் இருந்து மன நல ஆலோசனை இவையனைத்தும் சேர்ந்துதான் பெண்ணை ஆரோக்கியமாகவும், பலமானவளாகவும் செய்யும். குறிப்பாக கருச்சிதைவு போன்ற கடுமையான காலங்களில் பெண்ணை தேற்ற நல்ல சுற்றம் தேவை.

கருச்சிதைவுடன் தொடர்புடைய கட்டுக்கதைகளை மட்டும் நம்பி விடாதீர்கள்.

ஒருமுறை கருச்சிதைவானாலே நான் தாயாக முடியாதோ என்று பயந்துவிடாதீர்கள். சுற்றம், உங்கள் மருத்துவர்கள், மன நல ஆலோசகர்களின் அறிவுரையால் நீங்கள் மீண்டும் தாயாக முடியும் என்பதை நம்புங்கள். உங்களுக்கு தேவையனைத்தும் மருத்துவ உதவிதான். அடுத்த முறை கருத்தரிக்கும் முன்னரும் நல்ல ஆலோசகரை சந்தித்து கவுன்சிலிங் பெறுவது நல்லது.

கருச்சிதைவுக்கு பின்னர் உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது என்பதும் கட்டுக்கதைதான் உங்களுக்கு, அதற்கு பின்னர்தான் ஆரோக்கியமான உடல் தேவை. அதற்கு நீங்கள் பழங்கள், புரத உணவுகள், வைட்டமின் துணை உணவுகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். 

அதனுடன், யோகா, தியானம் உள்ளிட்ட சிறு, சிறு உடற்பயிற்சிகளை நாள்தோறும் 30 முதல் 45 நிமிடங்கள் செய்ய வேண்டும். வாரத்தில் குறைந்தது 5 நாளாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு வசதியான நேரத்தில் செய்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு உடல் வலுவை அதிகரிக்கும். அடுத்து கருத்தரிக்க உங்களுக்கு 2 முதல் 3 மாத கால இடைவெளி தேவை. எனவே ஒரு நல்ல வாழ்க்கை முறைக்கு மாறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்