Detox Drink : கல்லீரல் மற்றும் உடலில் உள்ள கழிவை நீக்க வேண்டுமா? இதோ இந்த முத்தான மூன்று குறிப்புகள்!
Detox Drink : கல்லீரல் மற்றும் உடலில் உள்ள கழிவை நீக்க வேண்டுமா? இதோ இந்த முத்தான மூன்று குறிப்புகள் உங்களுக்கு உதவும். இதைப்பின்பற்றி பயன்பெறுங்கள் .

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
குறிப்பு - 1
நெல்லிக்காய் – 4
இஞ்சி – ஒரு இன்ச்
புதினா – சிறிதளவு
அல்லது
மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை
நெல்லிக்காய், இஞ்சி, புதினா அல்லது மல்லித்தழை மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அடித்துக்கொள்ளவேண்டும். பின்னர் வடிகட்டி அதன் சாறை எடுத்து, நீங்கள் வழக்கமாக பருகும் தண்ணீரில் ஒரு லிட்டர் எடுத்து இந்த சாறை கலந்து வைத்துக்கொள்ளவேண்டும்.
இதை காலை உணவை எடுத்துக்கொள்ளாமல் இந்த தண்ணீரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மூன்று முறை பருகவேண்டும். இதை தொடர்ந்து 10 நாட்கள் செய்யவேண்டும். இதை பருகி முடித்துவிட்டு, பின்னர் சிறிது நேரம் கழித்து உணவை எடுத்துக்கொள்ளலாம்.
குறிப்பு – 2
அன்னாசிப்பழம் – 100 கிராம் (நறுக்கியது)
ஓமம் – 15 கிராம்
செய்முறை
ஒன்றரை லிட்டர் தண்ணீரில் அன்னாசிப்பழத்துண்டுகள் மற்றும் ஓமம் இரண்டையும் சேர்த்து அது ஒரு லிட்டர் ஆகும் வரை கொதிக்கவிடவேண்டும்.
அது கொதித்ததும் வடிகட்டி இதேபோல் காலை உணவை சாப்பிட்டுவிட்டு, மூன்று முறை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பருகவேண்டும்.
குறிப்பு – 3
வெள்ளரி பிஞ்சு – 100 கிராம்
எலுமிச்சை சாறு – அரைப்பழம்
இஞ்சி – ஒரு இன்ச்
மல்லித்தழை – சிறிதளவு
அல்லது
புதினா – சிறிதளவு
செய்முறை
வெள்ளரி பிஞ்சு, இஞ்சி, எலுமிச்சை சாறு, மல்லித்தழை என அனைத்தையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் அடித்து வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதை நீங்கள் வழக்கமாகப்பருகும் தண்ணீரில் ஒரு லிட்டர் 200 மில்லி லிட்டர் அளவு எடுத்து அதில் கலந்துவிடவேண்டும். இதை காலையில் உணவு எடுக்காமல், மூன்று முறையாக ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பருகவேண்டும். இது மூன்றுமே கல்லீரலில் உள்ள நச்சுக்களை அகற்றும்.
இது ஒவ்வொன்றையும் தொடர்ந்து 10 நாட்கள் செய்யவேண்டும். இதை செய்யும்போது கல்லீரல் வலுப்பெறும், நச்சுக்கள் நீங்கும், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி, உடல் வலுப்பெறும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்