விக்ரம் படத்திற்கு வந்த சோதனை! வீர தீர சூரன் வெளியிட இடைக்கால தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து நாளை (27/03/2025) வெளியாக இருந்த வீர தீர சூரன் திரைப்படம் வெளியாவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி நாளை வெளியாக இருந்த திரைப்படம் வீரதீரசூரன், இப்படத்தினை சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் கதைக்களமாக அமைந்திருந்தது. சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து இருந்தது. மேலும் விக்ரமின் திரையுலக பயணத்தில் இது முக்கியமான படமாக இருக்கும் எனவும் கருதப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படம் வெளியாக இடைக்கால தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சீயான் விக்ரமின் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரமின் சிறப்பு படம்
விக்ரமின் 62 ஆவது படமாக வீரதீரசூரன் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் இது முழுக்க ஆக்சன் திரில்லர் கதைகளமாக இருக்கும் என கூறப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு விக்ரமிற்கு தங்கலான் படம் வெளியாகி சிறப்பான பெயரை பெற்று தந்தது. இந்த வரிசையில் இந்த வருடமும் இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றி படமாக வரலாம் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது எதிர்பாராத விதமாக அமைந்துள்ளது.
