தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை மென்று சாப்பிட்டு பாருங்க.. எவ்வளவு நன்மைகள் நடக்கும் தெரியுமா?
கறிவேப்பிலையை அதிகாலையில் மென்று சாப்பிடுவது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சீராக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாம் நாள் முழுவதும் வெறும் வயிற்றில் சாப்பிடும் சில உணவுகள், நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளையும் தருகிறது. அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்று தான் கறிவேப்பிலை. இதை நாம் சமையலில் சுவைக்கு மட்டும் சேர்ப்பது என்று பார்க்காமல், உடலுக்கு எவ்வளவு நன்மை தரும் என்று பார்க்க வேண்டும்.
அது தெரிந்தால் கறிவேப்பிலை இல்லாமல் சமைக்க மாட்டீர்கள். தென்னிந்திய சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கறியின் சுவையை இரண்டு மடங்கு அதிகரிக்கிறது. கறிவேப்பிலை பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு நன்றாக வேலை செய்கிறது. இந்த இலைகளுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்.
கறிவேப்பிலையில் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், லினாலூல், ஆல்பா டெர்பினைன், மைர்சீன், மஹானிம்பைன், கேரியோஃபிலீன் மற்றும் பிற பண்புகள் உள்ளன.
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஆரோக்கியமான கல்லீரல் மிகவும் முக்கியம். ஆனால் வெளிப்புற உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பல காரணிகளால் கல்லீரல் சேதமடைகிறது. கல்லீரலை நல்ல நிலையில் வைத்திருக்க கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் பாதிப்பைத் தடுக்கின்றன.
கூந்தலுக்கு நல்லது
கூந்தலுக்கு கறிவேப்பிலை மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. முடி உதிர்தல் பிரச்னையை இது உடனடியாக குறைக்கிறது. கறிவேப்பிலை பயன்படுத்துவது கூந்தலுக்கு ஊட்டத்தை அளிக்கிறது. தினமும் கறிவேப்பிலை ஊற வைத்த நீரை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திலேயே கூந்தல் அடர்த்தியாகவும், கருப்பாகவும் மாறுவதை நீங்கள் பார்க்கலாம்.
செரிமானம்
பலரும் செரிமான பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். மலச்சிக்கல், வயிற்று வலி, வாயு மற்றும் வீக்கம் ஆகியவை பொதுவான பிரச்னைகள். அப்படிப்பட்டவர்கள் காலையில் 4 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் இது எல்லாம் தீரும்.
சர்க்கரை அளவு
கறிவேப்பிலையை அதிகாலையில் மென்று சாப்பிடுவது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை சீராக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, இன்சுலின் உணர்திறன் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்னைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே சர்க்கரை போன்ற பிரச்னை உள்ளவர்கள், அதிகாலையில் கறிவேப்பிலையை சுத்தம் செய்து சாப்பிடுவது நல்லது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இதன் காரணமாக இவற்றை மென்று சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, நச்சுத்தன்மையை நீக்கும். இது முழு உடலுக்கும் மிகவும் நல்லது.
தோல் பிரச்னை
கறிவேப்பிலை சாப்பிடுவதால் சரும பிரச்னைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். கறிவேப்பிலையை மென்று தின்பது நன்மையைத் தருவது மட்டுமல்ல, சருமத்தில் புண்கள் மற்றும் பருக்கள் இருந்தால், அது நீங்கிவிடும். இதை தொடர்ந்து செய்து வந்தால், சில நாட்களில் பலன் தெரியும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்