Dahi Baingan : தஹி பைங்கன்; எண்ணெய் கத்திரிக்காய் சாப்பிட்டு இருப்பீங்க, இது தயிர் கத்தரிக்காய்; ஒடியா டிஷ்!
தஹி பைங்கன் என்ற தயிர் கத்தரிக்காய் செய்வது எப்படி என்று பாருங்கள்.

தஹி பைங்கன் என்பது ஒடிசாவில் பரவலாகச் செய்யப்படும் ஒரு டிஷ் ஆகும். என்ன குழம்பு வைக்க வேண்டும் என்ற குழப்பம ஏற்படும்போது இந்த தயிர் கத்தரிக்காயை செய்துவிட்டு, அப்பளம் அல்லது முட்டை ஆம்லேட் போட்டு சாப்பிட்டுவிட்டு ரிலாக்ஸ் ஆகுங்கள்.
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் – 1
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
தயிர் – 100 மில்லி லிட்டர்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்
வர மிளகாய் – 1
செய்முறை
கத்தரிக்காயை கொஞ்சம் மொத்தமாக நறுக்கிக்கொள்ளவேண்டும். அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக கத்தரிக்காயின் இருபுறங்களிலும் தடவிக்கொள்ளவேண்டும்.
ஒரு ஃப்ளாட் கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், கத்தரிக்காயை இரண்டு புறங்களிலும் நன்றாக வறுத்து எடுக்கவேண்டும்.
அதை ஒரு பவுலில் போட்டு, அதன் மேல் தயிரை அடித்து சேர்க்கவேண்டும்.
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அது சூடானவுடன், அதில் கடுகு, சீரகம், உளுந்து சேர்த்து பொரிந்தவுடன், கறிவேப்பிலை, வரமிளகாய் கிள்ளி சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். அடுத்து அதில் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறிவிடவேண்டும். இந்த தாளிப்பை தயிர், கத்தரிக்காய் கலவையில் சேர்த்தால், சூப்பர் சுவையான தஹி பைங்கன் அதாவது தயிர் கத்தரிக்காய் தயார். இதை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.
நீங்கள் என்ன குழம்பு வைக்கவேண்டும் என்று குழம்பியிருக்கும்போது, இதை செய்து வைத்துவிட்டு ரிலாக்ஸ் செய்யலாம். இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம் மற்றும் முட்டை ஆம்லேட் போதுமானது. இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். சூப்பர் சுவையானது. இதை சப்பாத்தி மற்றும் ரொட்டிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
கத்தரிக்காயின் நன்மைகள்
கத்தரிக்காயின் நன்மைகள் என்னவென்று முதலில் பார்க்கலாம். கத்தரிக்காய் சாம்பாருக்கு நல்ல சுவையை அளிக்கக்கூடிய காய்களுள் ஒன்று. கத்தரிக்காய், முருங்ககைக்காய், மாங்காய் இந்த மூன்று காய்களையும் சேர்த்து வைக்கக்கூடிய சாம்பார் மிகவும் சுவையானதாக இருக்கும். அதனுடன் பலாக்கொட்டையும் சேர்த்துக்கொள்ள எந்தவிட மசாலாக்களும் சேர்க்காமலே சாம்பார் சுவை அள்ளும். இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸ்டன்ட்கள் நிறைந்துள்ளது.
இது உடலை பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நீண்ட கால நோய்கள் வராமல் தடுக்கும். ஆந்தோசியனின் என்பது கத்தரிக்காயில் அதிகம் உள்ளது. இதில் உள்ள இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்தான் கத்தரிக்காய் இந்த நிறத்தை கொடுக்கின்றன. இது பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
இதய நோய்கள் வராமல் காக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எடை குறைப்பில் உதவுகிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது. இதை எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை வறுத்து சாப்பிடலாம். சாம்பார் வைத்து சாப்பிடலாம். சாம்பாரில் சேர்ததால் கூடுதல் சுவையை கொடுக்கிறது. கத்தரிக்காய் சிலருக்கு சரும அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே சரும பிரச்னைகள் உள்ளவர்கள் கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்க்கக்கூடாது.
கத்தரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உள்ளவர்களும் கத்தரிக்காயை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றபடி அனைவரும் வாரத்தில் ஒருமுறை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய காய்தான் கத்தரிக்காய்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்