Cow Urine : கோமியம் – மாட்டின் சிறுநீர்; கழிவா? மருந்தா? அறிவியல் கூறுவது என்ன? – மருத்துவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cow Urine : கோமியம் – மாட்டின் சிறுநீர்; கழிவா? மருந்தா? அறிவியல் கூறுவது என்ன? – மருத்துவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!

Cow Urine : கோமியம் – மாட்டின் சிறுநீர்; கழிவா? மருந்தா? அறிவியல் கூறுவது என்ன? – மருத்துவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 24, 2025 06:00 AM IST

மாட்டின் சிறுநீர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவர்கள். மாட்டின் சிறுநீர் குறித்த என்ன சொல்கிறார்கள் கேளுங்க.

கோமியம் – மாட்டின் சிறுநீர்; அறிவியல் கூறுவது என்ன? – மருத்துவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!
கோமியம் – மாட்டின் சிறுநீர்; அறிவியல் கூறுவது என்ன? – மருத்துவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!
மருத்துவர்கள் ராசா ஈசன், புகழேந்தி, காமராஜ்.
மருத்துவர்கள் ராசா ஈசன், புகழேந்தி, காமராஜ்.

திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் கூறுகையில்,

சித்த. ஆயுர்வேத மருந்துகளில் மாட்டின் சிறுநீர் பயன்படுத்தப்படுவது உண்மைதான். சித்த மருந்து நிறுவனங்களில் சில மருந்துகளின் உட்பொருட்களின் பட்டியலில் அவை வெளிப்படையாகவே குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அதை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. முழுவதும் அப்படியேவும் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. முறையாக சுத்தி (சுத்தி என்றால் சுத்தம் செய்வது) செய்து அது தேவையான மருந்துகளில் மட்டும் தேவையான அளவு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. சித்த மருத்துவ புத்தகங்களிலும் சிறுநீரின் பயன்பாடுகள் குறித்த குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. நம் முன்னோர்கள், மாட்டின் சாணத்தைக் கொண்டுதான் வீடுகளையும், வாசல்களையும் மெழுகி சுத்தம் செய்தார்கள். மாட்டின் சிறுநீர் கோமியம் என்று அழைக்கப்படுகிறது. அதை கிருமி நாசினியாக வீடுகளில் தெளித்தார்கள். ஆனால், அவர்கள் வேறு எந்த விலங்குகளின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தவில்லை. எனவே இதுகுறித்து நாம் சிந்திக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சித்த மருத்துவ புத்தகத்தில் உள்ள விளக்கம்.
சித்த மருத்துவ புத்தகத்தில் உள்ள விளக்கம்.

பாரம்பரிய இயற்கை மருத்துவர் ராசா ஈசன் கூறுகையில்,

நான் இயற்கை மருத்துவத்தை வழக்கமான மக்களைப் போல் கல்லூரியில் சென்று கற்றுக் கொள்ளவில்லை. எனது குருநாதர் ஆகிய வெள்ளிமலை சித்தர் அவர்களிடம் கற்றுக்கொண்டேன். நான் அக்குபஞ்சர் மற்றும் பாரம்பரிய இயற்கை சிகிச்சை முறைகளைப் பின்பற்றி நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வருகிறேன். எனவே பெரும்பாலும் மருந்தில்லா மருத்துவம் தான். எனினும், எங்கள் மருத்துவத்தில் மருந்தென்றால் அது மூலிகைகள் மட்டும்தான். எங்கள் சிகிச்சை முறையில் ஒரு சில மூலிகைகளை சுத்தி செய்ய (சுத்தி என்றால் சுத்தம் செய்வது என்று பொருள்) மாட்டின் சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஒரு சில வெளிப்பிரயோக மருந்துகளில் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் மருத்துவர் கல்பாக்கம் புகழேந்தி கூறுகையில்,

மாட்டின் சிறுநீரில் மருத்துவ குணங்கள் கொண்டதா என்பதை அறிவியல் ஆய்வுகள் தான் உறுதிப்படுத்தவேண்டும். அறிவியல் விஷயத்தை அறிலியலாக மட்டும்தான் பார்க்கவேண்டும். அதில் அரசியல் கலக்கக்கூடாது. அந்த அறிவியலும் மக்களுக்கானதாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக டிபிக்கான மருந்தை கண்டுபிடித்த வாக்ஸ்மேன் என்பவர் அதற்கான காப்புரிமை வாங்கவில்லை. அதற்கு அறிவியல் மக்களுக்கானதாக இருக்கவேண்டும் என்று கூறுகிறார். மாட்டின் சிறுநீரில் அறிவியல் குணம் உள்ளது என ஒரு பிரிவினரும், அதை எதிர்ப்பவர் ஒரு பிரிவினரும் உள்ளனர். இதுபோல் இருபிரிவினர்கள் இருக்கும்போது, அது அறிவியல் பார்வையில்லாத வாய்ப்பை ஏற்படுத்திவிடுகிறது. எனவே நாம் ஆய்வுகளை பார்க்கவேண்டும். இந்த வியாதிகளுக்கு அறிவியல் ரீதியாக உட்படுத்தப்பட்டு, மாட்டின் சிறுநீர் பலன் அளிக்கிறது. அதனால் பக்கவிளைவுகள் இல்லை. அறிவியல் ஆய்வில் எப்போதும் இரண்டு விஷயங்கள் முக்கியம் அது பலன் தருகிறது மற்றும் பாதுகாப்பானதா என்ற இரண்டும் உறுதிபடுத்தப்படவேண்டும். எனவே அறிவியல் மட்டுமே இதில் பார்க்கப்படவேண்டிய ஒன்று. எனவே அறிவியல் ஆதாரங்களை முன்வைக்க அதை ஆதரிப்பவர்கள் முன்வரவேண்டும். அந்த ஆய்வுகள் முறையானதா என்பதை அதை எதிர்ப்பவர்களும் கவனிக்கவேண்டும். கண்மூடித்தனமாக எதிர்க்கக்கூடாது. ஐஐடி இயக்குனரும் அறிவியல் ஆய்வுகளை மேற்கோள் காட்டுகிறார். அதை பார்க்கும்போது, மாட்டின் சிறுநீர் மருத்துவத்துக்கு பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என அந்த அறிவியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளது. எனவே இன்னும் விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டு, அது நிரூபிக்கப்படும்போது அதை ஏற்கலாம். ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு’ என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க நாம் எந்த ஒரு செயலையும் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.