Covaxin: ‘கோவாக்சின் தடுப்பூசி போட்டவங்களுக்கு ஒரு வருடத்திற்குப் பிறகு..’-ஆய்வில் வெளியான பகீர் தகவல்
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட 30% க்கும் அதிகமானோர் 1 வருடத்திற்குப் பிறகு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர் என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டை போட்டுக்கொண்டவர்களுக்கு அரிதினும் அரிதாக பக்க விளைவுகள் ஏற்படக் கூடும் என தகவல் சமீபத்தில் வந்தது.

Covaxin: ‘கோவாக்சின் தடுப்பூசி போட்டவங்களுக்கு ஒரு வருடத்திற்குப் பிறகு..’-ஆய்வில் வெளியான பகீர் தகவல் (மாதிரிப்படம்) (pixabay)
பாரத் பயோடெக்கின் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசி கோவாக்சின் செலுத்திக் கொண்ட நபர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினருக்கு ‘பக்கவிளைவுகள்’ ஏற்பட்டதாக, பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஒரு வருட பின்தொடர்தல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆய்வில் பங்கேற்ற 926 பேரில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் பின்தொடர்தல் காலத்தில் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகளை பதிவு செய்துள்ளனர்.