கொரோனா வைரஸ் : கொரோனா தடுப்பில் தமிழக அரசின் சொல்லும்,செயல்பாடும் - மருத்துவர் கேள்வி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கொரோனா வைரஸ் : கொரோனா தடுப்பில் தமிழக அரசின் சொல்லும்,செயல்பாடும் - மருத்துவர் கேள்வி!

கொரோனா வைரஸ் : கொரோனா தடுப்பில் தமிழக அரசின் சொல்லும்,செயல்பாடும் - மருத்துவர் கேள்வி!

Priyadarshini R HT Tamil
Published Jun 03, 2025 06:03 PM IST

கொரோனா வைரஸ் : பள்ளி, கல்லூரிகள், பொது இடங்கள், அரசு மருத்துவமனைகள், அலுவலகங்கள் ஒன்றில் கூட ஓடுகின்ற நீரை வைத்து, சோப்பால் கை கழுவும் வசதிகள் இல்லாமல் இருப்பது எப்படி சரியாகும்?

கொரோனா வைரஸ் : கொரோனா தடுப்பில் தமிழக அரசின் சொல்லும்,செயல்பாடும் - மருத்துவர் கேள்வி!
கொரோனா வைரஸ் : கொரோனா தடுப்பில் தமிழக அரசின் சொல்லும்,செயல்பாடும் - மருத்துவர் கேள்வி!

இந்நிலையில், துணை-முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது நல்ல செய்தியே.

இருப்பினும், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதா? கொரோனா பாதிப்பு இல்லையா? என்ற விவரம் இல்லை. கொரோனா பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை அமைச்சர், கைகளை அடிக்கடி சோப்பால் கழுவ வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதனால் கையில் உள்ள கிருமிகள் சாவதற்கும், வெளியேறுவதற்கும், கைகளை சோப்பால் கழுவுவது நல்லது.

மேலும் கைகளில் உள்ள கிருமிகள் பிற இடங்களில் பரவாமல் இருக்கவும், அதனால் அந்த இடங்களைத் தொடும் பிறருக்கும் நோய் கிருமிகள் பரவாமல் தடுக்கப்படும்.

இருப்பினும், பள்ளி, கல்லூரிகள், பொது இடங்கள், அரசு மருத்துவமனைகள், அலுவலகங்கள் ஒன்றில் கூட ஓடுகின்ற நீரை வைத்து, சோப்பால் கை கழுவும் வசதிகள் இல்லாமல் இருப்பது எப்படி சரியாகும்?

தலைமைச் செயலகம், மருத்துவ சேவை இயக்குநரகம் (Director of Medical Services) போன்ற முக்கிய இடங்களில் கூட கழிவறைகளில் கை கழுவ சோப்பு வசதி இல்லை.

எனவே, வருமுன் காப்பது சிறந்தது என இருந்தாலும் தமிழகத்தில் ஓடும்நீர் வசதி (Running water), சோப் வசதியோ இல்லாமல் இருப்பது, தமிழக அரசின் சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடு இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதால் அதைக் களைய உடனடி நடவடிக்கைகள் தேவை.

தமிழக சுகாதாரத்துறை செவி சாய்க்குமா?

நன்றி - மருத்துவர். புகழேந்தி.