குளிருக்கு இதமான தேநீர்! இனி தினமும் இதுதான் கோடை வரும் வரை! சளி, இருமல், காய்ச்சலை அண்டவிடாது!
குளிருக்கு இதமான தேநீர், இனி தினமும் இதுதான் கோடை வரும் வரை. சளி, இருமல், காய்ச்சலை அண்டவிடாது. தொற்றுக்களை துரத்தும் இந்த தேநீரை செய்வதும் எளிதுதான். இதைச் செய்வதற்கு வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களே போதுமானது. இதை செய்வது எப்படி என்று பாருங்கள் .

மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
குளிர்க் காலத்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும். இதனால் காற்றில் ஈரப்பதம் உயர்ந்து, உங்களுக்கு அடிக்கடி சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகிய தொற்றுகள் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. தொண்டை வறட்சி, தொண்டையில் தொற்று என ஏற்படலாம். அதற்கு இந்த ஒரு டீயை நீங்கள் தினமும் வழக்கமாக பருகும் டீக்கு பதில் பருகவேண்டும்.
தேவையான பொருட்கள்
மிளகு – கால் ஸ்பூன்
