தேங்காய்ப்பால் கறி : இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்ற தேங்காய்ப்பால் கறி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தேங்காய்ப்பால் கறி : இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்ற தேங்காய்ப்பால் கறி!

தேங்காய்ப்பால் கறி : இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்ற தேங்காய்ப்பால் கறி!

Priyadarshini R HT Tamil
Updated May 05, 2025 02:29 PM IST

தேங்காய்ப்பால் கறி : அதை செய்துவிட்டால் இந்த கறியை நீங்கள் சில நிமிடங்களில் செய்து முடித்துவிடலாம். இதை தேங்காய் எண்ணெயில் செய்யும்போது மட்டும்தான் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.

தேங்காய்ப்பால் கறி : இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்ற தேங்காய்ப்பால் கறி!
தேங்காய்ப்பால் கறி : இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்ற தேங்காய்ப்பால் கறி!

தேவையான பொருட்கள்

• தேங்காய் எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

• கடுகு – கால் ஸ்பூன்

• வெந்தயம் – கால் ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• வர மிளகாய் – 4

• பச்சை மிளகாய் – 1

• பூண்டு – 5 பல்

• இஞ்சி – கால் இன்ச்

• பெரிய வெங்காயம் – 2

• தக்காளி – 2

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்

• மல்லித் தூள் – 2 ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• புளி – சிறிய நெல்லிக்காய் அளவு (சூடான தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்)

• முதல் தேங்காய்ப்பால் – ஒரு கப்

• இரண்டாம் தேங்காய்ப்பால் – ஒரு கப்

• மல்லித்தழை - சிறிதளவு

செய்முறை

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்கவேண்டும். அதை தாளித்தவுடன், கறிவேப்பிலை, வர மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொரியவிடவேண்டும்.

2. அடுத்து பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நல்ல பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும். அடுத்து பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அடுத்து தக்காளியை சேர்த்து நன்றாக மசியவிடவேண்டும்.

3. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து புளியை கரைத்து சேர்த்துவிட்டு நன்றாக கொதித்த பின்னர் இரண்டாம் தேங்காய்ப் பால் மற்றும் முதல் தேங்காய்ப் பால் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

4. கடைசியாக மல்லித்தழை தூவிவிட்டு, தேங்காய் எண்ணெயையும் சிறிது ஊற்றி இறக்கினால் சூப்பர் சுவையான தேங்காய்ப் பால் கறி தயார். இதை நீங்கள் சூடான இட்லி, தோசை, ஆப்பம் மற்றும் இடியாப்பம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

இதை செய்வதும் எளிது. இதன் அசத்தலான சுவை உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். இதில் காய்கறிகள் எதுவும் சேர்க்காமல் பிளைன் கிரேவியாக இருக்கும் என்பதால் காய்கறி பிடிக்காதவர்களும் சாப்பிட்டுவிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.