Child Rearing Tips : உங்கள் குழந்தைகளை நேர்மையானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் வளர்ப்பது எப்படி? இதோ டிப்ஸ்!
Child Rearing Tips : உங்கள் குழந்தைகளை நேர்மையானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் வளர்க்க வேண்டுமா? இதோ டிப்ஸ்!

தேசத்தின் எதிர்காலமே குழந்தைகள்தான். அவர்கள் தான் எதிர்கால இந்தியாவை கட்டமைக்க உள்ளார்கள். அவர்களே எதிர்காலத்தில் நமக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்வார்கள். எதிர்கால இந்தியாவை கட்டமைக்க உள்ள அவர்களை நாம் நேர்மையானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் வளர்ப்பது நமது கடமையாகிறது. அப்போதுதான் அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நேர்மைதான், உண்மை, ஒற்றுமை, புத்திசாலித்தனம் என அனைத்தையும் கொண்டுவந்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். உங்கள் குழந்தைகளை புத்திசாலித்தனமாகவும், நேர்மையாகவும் வளர்க்க உதவும் டிப்ஸ்கள்.
குழந்தைகளின் ரோல் மாடலாக இருங்கள்
குழந்தைகள் எப்போதும் அவர்களின் பெற்றோரை அப்படியே பின்பற்றுகிறார்கள். நீண்ட காலம் அவர்கள் பெற்றோரின் சாயல் அவர்களுடன் ஒட்டிக்கொள்கிறது. எனவே பெற்றோரின் செயல்கள் மற்றும் வார்த்தைகளே உங்கள் குழந்தைகளுக்கு நீண்ட நாள், சரி எது தவறு எது என்று கூறுகிறது. எனவே உங்கள் குழந்தைகள் சரியானதை கற்றுக்கொள்வதற்கு நீங்களே காரணமாகிறீர்கள் என்ற பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். அவர்களுக்கு சரியானவற்றையும், நல்லனவற்றையும் கற்றுக்கொடுக்க வேண்டும். எனவே உங்கள் செயல்களிலும், உங்கள் பேச்சிலும் நேர்மை கட்டாயம் இருக்க வேண்டும். உங்கள் சிந்தனைகள், முடிவுகள், உணர்வுகள் என அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். எனவே உங்கள் தவறுகளை ஏற்க பழகுங்கள், பொறுப்பெடுத்துக்கொள்ளுங்கள். நேர்மைக்கான ஒரு ரோல் மாடலாக நீங்கள் உங்கள் குழந்தைக்கு இருக்கும்போது, அவர்களுக்கு ஒரு பலமான அடித்தளத்தை நீங்கள் உருவாக்குகிறீர்கள். அதை அவர்கள் பின்பற்றி அவர்களின் வாழ்வை வளமாக்கிக்கொள்வார்கள்.
கேள்வி கேட்பதை ஊக்குவியுங்கள்
உங்கள் குழந்தைகள் கேள்வி கேட்பதை ஊக்குவிக்க வேண்டும். புதிய விஷயங்கள் குறித்து அவர்கள் பேசுவதையும் நீங்கள் உற்சாகப்படுத்த வேண்டும். உங்கள் குழந்தை சிறியவராக இருந்தால், இன்றும் புதிய விஷயங்களை தெரிந்துகொள் விழைபவராக இருந்ததால், கட்டாயம் அவர்கள் கேள்வி கேட்காமல் இருக்கக்கூடாது என்பது முக்கியம். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கான விடைகளை அவர்கள் தெரிந்துகொள்ள உங்கள் அனுபவங்கள், புத்தகங்கள், உரையாடல்கள் வாயிலாக பதில் அளிக்க முயற்சி செய்யுங்கள். அவர்களை கேள்விகள் கேட்க ஊக்குவிப்பதன் மூலம், அவர்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறன், காரணங்களை அறியும் தன்மை ஆகியவை தூண்டப்படும். இதனால் அவர்களால் சுதந்திரமாகவும், லாஜிக் உடனும் சிந்திக்க முடியும்.