குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : ‘வாழ்வில் வரமாய் வந்த குழந்தைகள்’ இவையெல்லாம் உங்கள் குழந்தைகளிடம் இருக்கிறதா பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : ‘வாழ்வில் வரமாய் வந்த குழந்தைகள்’ இவையெல்லாம் உங்கள் குழந்தைகளிடம் இருக்கிறதா பாருங்கள்!

குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : ‘வாழ்வில் வரமாய் வந்த குழந்தைகள்’ இவையெல்லாம் உங்கள் குழந்தைகளிடம் இருக்கிறதா பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Updated Mar 29, 2025 02:18 PM IST

குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : அதிக நினைவாற்றல் திறன் கொண்டவர்களை மட்டும் வரம் என்று கூற முடியாது. கிரியேட்டிவானவர்கள், பிரச்னைகளைத் தீர்க்கும் எண்ணம் கொண்டவர்கள், விளையாட்டு துறைகளில் முன்னேறுபவர்கள் அல்லது கலைத்திறன் கொண்டவர்கள் என அது அனைத்தும் சேர்ந்தது என்று கூறலாம்.

குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : ‘வாழ்வில் வரமாய் வந்த குழந்தைகள்’ இவையெல்லாம் உங்கள் குழந்தைகளிடம் இருக்கிறதா பாருங்கள்!
குழந்தை வளர்ப்பு குறிப்புகள் : ‘வாழ்வில் வரமாய் வந்த குழந்தைகள்’ இவையெல்லாம் உங்கள் குழந்தைகளிடம் இருக்கிறதா பாருங்கள்!

வலுவான தலைமைப் பண்புகள்

ஒரு சில குழந்தைகள் தாங்களாகவே முன்வந்து தலைமைப் பண்புகளை ஏற்பார்கள். அவர்களின் நண்பர்களை தன்னம்பிக்கையுடன் வழிநடத்துவார்கள். வலுவான முடிவெடுக்கும் திறனை காட்டுவார்கள். மற்றவர்களை கவர்ந்து இழுப்பார்கள், இவையெல்லாம் ஆரம்ப காலகட்டத்திலே தெரியவரும்.

பர்ஃபெக்ட்டானவர்களாக இருப்பார்கள்

உங்கள் குழந்தைகள் அவர்களே உயர்ந்த தரம் கொண்டவர்களாக இருப்பார்கள். உயர்ந்த எண்ணங்களும், குறிக்கோள்களும் கொண்டிருப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியவில்லையென்றால் பாதிக்கப்படுவார்கள். அவர்களையே விமர்சித்துக்கொள்வார்கள்.

ஆர்வங்கள்

அவர்களிடம் சில டாபிக்குகள் குறித்த பேசினால் அவர்கள் அதில் மூழ்கிவிடுவார்கள். விண்வெளி, டைனோசரஸ், இசை, கணிதம் என எதைப் பற்றி பேசினாலும், அவர்கள் உண்மை தகவல்களை சேகரித்து பேச முயல்வார்கள். இதில் அவர்களின் திறன் அபாராமாக இருக்கும்.

நகைச்சுவை உணர்வு

அவர்களின் வயதைக் கடந்த ஜோக்குகளை கூறுவார்கள். இடத்துக்கு ஏற்ப ஜோக்குகளை கூறுவார்கள். உரையாடலின்போது கூட மற்றவர்கள் மறந்துவிட்டால் ஜோக்குகளைக் கூறுவார்கள்.

சிந்தனை

மாறுபட்ட சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் வெளிப்படையாக உள்ளதைக் கடந்து யோசிப்பார்கள். அவர்கள் அறிவு மற்றும் அறிவியல் ரீதியான விவாதங்களில் பங்கேற்பார்கள். விதிகளுக்கு சவால் விடுவார்கள். அதிகப்படியான ஐடியாக்களை புரிந்துகொள்வார்கள்.

சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கிறது

இவர்கள் உணர்வு ரீதியான அறிவுத்திறன் நிறைந்த குழந்தைகளாக இருப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பார்கள். மற்றவர்கள் மீது அனுதாபம் கொள்வார்கள். இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மகிழ்ச்சி மற்றும் துன்பம் இரண்டுக்கும் அவர்கள் வலுவாக பதிலளிப்பார்கள்.

நல்ல கற்பனைத்திறன்

அவர்களின் கற்பனைத்திறன் கதைகளை கூறுவதன் மூலம் வெளிப்படும். அவர்கள் நடித்துக் காட்டுவார்கள், புதிய கான்செப்ட்களுடன் வருவார்கள். அவர்களின் கதைகளில் எண்ணற்ற கதாபாத்திரங்கள் இருப்பார்கள். அவர்களின் உலகம் வித்யாசமானதாக இருக்கும். அவர்களின் கண்டுபிடிப்புகள் அவர்களின் வயதுக்கு அப்பாற்பட்டு இருக்கும்.

எனவே இந்த திறமைகள் உங்கள் குழந்தைகளிடம் இருந்தால், அவர்கள் நிச்சயம் வாழ்வில் வரமாய் வந்த குழந்தைகள். எனவே அவர்களை நாம் நல்ல முறையில் வழிநடத்தில் அவர்கள் வாழ்வு வளமாக வழிவகுக்க வேண்டும்.