செட்டிநாடு தக்காளி குருமா : தக்காளி குருமா; இது செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிபி! வாயில் எச்சில் ஊறவைக்கும் சுவை கொண்டது!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  செட்டிநாடு தக்காளி குருமா : தக்காளி குருமா; இது செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிபி! வாயில் எச்சில் ஊறவைக்கும் சுவை கொண்டது!

செட்டிநாடு தக்காளி குருமா : தக்காளி குருமா; இது செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிபி! வாயில் எச்சில் ஊறவைக்கும் சுவை கொண்டது!

Priyadarshini R HT Tamil
Updated Mar 21, 2025 12:56 PM IST

செட்டிநாடு தக்காளி குருமா : செட்டிநாடு ஸ்பெஷல் தக்காளி குருமா ரெசிபியை செய்வது எப்படி என்று பாருங்கள். டிஃபனுக்கு ஏற்ற சைட் டிஷ் இது. செய்வது எளிது.

செட்டிநாடு தக்காளி குருமா : தக்காளி குருமா; இது செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிபி! வாயில் எச்சில் ஊறவைக்கும் சுவை கொண்டது!
செட்டிநாடு தக்காளி குருமா : தக்காளி குருமா; இது செட்டிநாடு ஸ்பெஷல் ரெசிபி! வாயில் எச்சில் ஊறவைக்கும் சுவை கொண்டது!

தேவையான பொருள்கள்

• தக்காளி – 10 (பொடியாக நறுக்கவேண்டும்)

• பச்சை மிளகாய் – 2

• வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

• முந்திரி – 8

• பூண்டு – 8 பல்

• சோம்பு – அரை ஸ்பூன்

• தேங்காய்த் துருவல் – ஒரு கப்

• கசகசா – ஒரு ஸ்பூன்

• பட்டை – 2 இன்ச்

• கடுகு – ஒரு ஸ்பூன்

• எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• மல்லித்தழை – சிறிதளவு 

செய்முறை

1. ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், கசகசா, முந்திரி, பட்டை, சோம்பு, பச்சை மிளகாய், பூண்டு, நறுக்கிய வெங்காயத்தில் ஒரு ஸ்பூன் மட்டும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிருதுவாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

2. கடாயில் எண்ணெய்விட்டு, சூடானவுடன், கடுகு சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து கறிவேப்பிலை மற்றும் எஞ்சிய வெங்காயத்தை சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.

3. அது நன்றாக வதங்கியவுடன், நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

4. வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

5. கலவை நன்றாக கொதித்ததவுடன், உப்பு சேர்த்து கிளறிவிட்டு, மல்லித்தழை தூவி இறக்கவேண்டும். சுவையான செட்டிநாடு தக்காளி குருமா தயார்.

இதை இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அனைவருக்கும் பிடித்தமான இந்த செட்டிநாடு தக்காளி குருமாவை ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இந்த தக்காளி குருமா அத்தனை சுவையானது.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.