Migraine Pain: ஒற்றை தலைவலி எதனால் வருகிறது?..மருத்துவர் சொல்லும் தீர்வு என்ன? - முழு விபரம் இதோ..!
Migraine Pain: அதிக வேலை, மனக் குழப்பம், மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவையே, ஒற்றைத் தலைவலி வருவதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும். அதை சரிசெய்யக்கூடிய அருமருந்து பற்றி பார்ப்போம்.

உலகம் முழுவதும் பொதுவாகக் காணப்படக்கூடிய நோய்களில் மிக முக்கியமான ஒன்று தான் ஒற்றைத் தலைவலி (Migraine). உலக அளவில் 14.7 சதவீதத்தினர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, 7 பேரில் ஒருவருக்கு இதன் பாதிப்பு உள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக சைனஸ் நோய் பிரச்னை உள்ளவர்களில் நூற்றில் 90 பேருக்கு குளிர்காலத்தில் ஒற்றைத் தலைவலி இருந்துகொண்டே இருக்கும். இந்த ஒற்றை தலைவலியானது 75 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
பக்கவாத ஒற்றைத் தலைவலி, கண் நரம்பு ஒற்றைத் தலைவலி, முக நரம்பு ஒற்றைத் தலைவலி என ஒற்றைத் தலைவலியில் பல வகை உண்டு. அதிலும், குறிப்பாக ஒற்றைத் தலைவலி 4 முதல் 72 மணி நேரம் வரை நீடிக்கும்.
ஒற்றைத் தலைவலி எதனால் வருகிறது?
அதிக வேலை, மனக் குழப்பம், மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவையே, ஒற்றைத் தலைவலி வருவதற்கு முக்கியமான காரணங்கள் ஆகும்.