எல்லையில் நிலவும் பதட்ட சூழ்நிலையால் காஷ்மீருக்கு செல்ல முடியாது! அப்போ இந்த மினி காஷ்மீர் இருக்கே! சிறப்பம்சங்கள் என்ன?
காஷ்மீரின் அழகை எவ்வளவுதான் புகழ்ந்தாலும் போதாது. ஆனால் இப்போது காஷ்மீர் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் சூழல் நிலவுகிறது. எனவே இந்த முறை மினி காஷ்மீருக்கு செல்ல முயற்சி செய்யுங்கள். இது உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது.

காஷ்மீரை சொர்க்கம் என்று சொல்வார்கள், ஆனால் இப்போது அந்த சொர்க்கத்தில் யுத்தச் சூழல் நிலவுகிறது. கோடை விடுமுறையில் காஷ்மீர் செல்ல விரும்புபவர்கள், இந்த முறை மினி காஷ்மீருக்கு செல்கின்றனர். அதுவும் ரொம்ப அழகு நிறைந்ததாக காணப்படுகிறது. இந்த மினி காஷ்மீர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது. உத்தரகண்ட் மாநிலம் மிகவும் அழகானது, அதை கடவுளின் பூமி என்று அழைக்கிறார்கள். இந்த இடத்தின் இயற்கை அழகு கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. உத்தரகாண்டில் பல ஆன்மீக இடங்களும் உள்ளன.
முன்சியாரி.. மினி காஷ்மீர்
கோடை விடுமுறையில், உத்தரகண்டில் உள்ள மினி காஷ்மீரைப் பார்க்க முயற்சி செய்யலாம். இந்த இடத்தின் அழகு நிச்சயமாக காஷ்மீரை உங்களுக்கு நினைவூட்டும். அதனால்தான் இது இந்தியாவின் மினி காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியின் அசல் பெயர் முன்சியாரி என்பதாகும். பசுமையான பள்ளத்தாக்குகள், உயர்ந்த இமயமலை மலைகள் மற்றும் இங்குள்ள அமைதியான சூழ்நிலை ஆகியவை நீங்கள் காஷ்மீரில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும்.