புற்றுநோய்க்கு தடுப்பூசியை கண்டறிந்த ரஷ்யா! இலவசமாக கொடுக்கவும் திட்டம்! பின்னணி என்ன?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோய் பாதிப்பு இருக்கிறது. இதற்கான தெளிவான காரணிகள் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த புற்றுநோய் என்பது இறந்த செல்களின் அதீத வளர்ச்சி என்பதாகும்.
உலக அளவில் புதியதாக பல நோய்கள் பரவி வருகின்றன. அதிலும் சில நோய்கள் உயிர்க் கொல்லி நோயாகவும் உள்ளது. அவ்வாறு தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கரோனா தொற்று உலகம் முழுவயதும் பரவி பல லட்ச கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கியது. அதற்காக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்கள் வீட்டின் உள்ளேயே முடங்கி கிடந்தனர். இதனை சமாளித்து உலகம் இப்போது தான் மூச்சு விட தொடங்கியுள்ளது. இருப்பினும் புதிய நோய்கள் குறித்து அச்சுறுத்தலும் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் உலகம் முழுவதும் அச்சுறுத்தும் ஒரு நோய் தான் புற்றுநோய்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோய் பாதிப்பு இருக்கிறது. இதற்கான தெளிவான காரணிகள் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த புற்றுநோய் என்பது இறந்த செல்களின் அதீத வளர்ச்சி என்பதாகும். இதற்கு ஒரு தீர்வாக தற்போது ரஷ்யா சுகாதார மையம் புற்றுநோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்றை ரஷ்யா வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் தடுப்பூசி
புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியது. இது குறித்து பேசிய ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின், “இந்த தடுப்பூசி 2025 ஆம் ஆண்டிலேயே இலவசமாக விநியோகிக்கப்படும்” என்று கூறினார். இந்த செய்தியை ரஷ்ய செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.
புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி விரைவில் நடைமுறைக்கு வரும் என்று ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். பொதுமக்களுக்குப் பதிலாக புற்றுநோயாளிகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாஸ்கோவில் உள்ள கமால்யா நேஷனல் ரிசர்ச் சென்டர் ஃபார் எபிடெமியாலஜி மற்றும் மைக்ரோபயாலஜியின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ஸ்பர்க் கூறுகையில், இந்த தடுப்பூசி கட்டி வளர்ச்சி மற்றும் பரவுவதை தடுக்கும் எனத் தெரிவித்தார்.
பயன்பாடு
தடுப்பூசி பல ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டது மற்றும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொது பயன்பாட்டிற்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசியின் முன் மருத்துவ பரிசோதனைகள், கட்டி வளர்ச்சி மற்றும் சாத்தியமான மெட்டாஸ்டேஸ்களை அடக்குவதாகக் காட்டியது என்று கமலேயா நேஷனல் ரிசர்ச் சென்டர் ஃபார் எபிடெமியாலஜி மற்றும் மைக்ரோபயாலஜி அலெக்சாண்டர் ஜின்ட்ஸ்பர்க் டாஸ்ஸிடம் தெரிவித்தார்.
எம்ஆர்என்ஏ தடுப்பூசி என்றால் என்ன?
mRNA அல்லது messenger-RNA தடுப்பூசிகள் அதன் புரதம், சர்க்கரை அல்லது பூச்சு போன்ற தொற்று முகவரின் குறிப்பிட்ட பகுதிகளைப் பயன்படுத்துகின்றன. எம்ஆர்என்ஏ தடுப்பூசி நமது உயிரணுக்களுக்கு ஒரு புரதத்தை அல்லது வைரஸைப் போன்ற ஒரு புரதத்தின் ஒரு பகுதியை உருவாக்க ஒரு செய்தியை அளிக்கிறது. புரதம் பின்னர் நம் உடலுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது.
தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசி
முன்னதாக, TASS உடனான ஒரு நேர்காணலில் ரஷ்யாவின் தடுப்பூசி தலைவர் ஜின்ட்ஸ்பர்க் கூறுகையில், செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகளின் பயன்பாடு, தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கத் தேவையான கணினியின் கால அளவை ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகக் குறைக்கும் என்று கூறியிருந்தார்.
"இப்போது தனிப்பயனாக்கப்பட்ட தடுப்பூசிகளை (Personalized vaccine)உருவாக்க அதிக நேரம் எடுக்கும், ஏனெனில் ஒரு தடுப்பூசி அல்லது தனிப்பயனாக்கப்பட்ட mRNA, கணித அடிப்படையில் மேட்ரிக்ஸ் முறைகளைப் பயன்படுத்துகிறது. அதாவது நியூரல் நெட்வொர்க் கம்ப்யூட்டிங், இந்த நடைமுறைகள் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும்" என்று கூறினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்