புற்றுநோய் : தாமிரபரணியைத் தொடர்ந்து நொய்யல் நீரிலும் அதிகம் உள்ள புற்றுநோய் காரணிகள் – அதிர்ச்சி ஆய்வு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  புற்றுநோய் : தாமிரபரணியைத் தொடர்ந்து நொய்யல் நீரிலும் அதிகம் உள்ள புற்றுநோய் காரணிகள் – அதிர்ச்சி ஆய்வு!

புற்றுநோய் : தாமிரபரணியைத் தொடர்ந்து நொய்யல் நீரிலும் அதிகம் உள்ள புற்றுநோய் காரணிகள் – அதிர்ச்சி ஆய்வு!

Priyadarshini R HT Tamil
Published Mar 28, 2025 02:31 PM IST

புற்றுநோய் : மேற்கு தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரி மலையில் தோன்றி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை வளப்படுத்தி காவிரியுடன் கலக்கும் இந்த ஆற்றங்கரையோரங்களில் உள்ள நிலத்தடி நீர் மற்றும் ஆற்று நீர் இரண்டிலுமே எண்ணற்ற ஹெவி மெட்டல்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

புற்றுநோய் : தாமிரபரணியைத் தொடர்ந்து நொய்யல் நீரிலும் அதிகம் உள்ள புற்றுநோய் காரணிகள் – அதிர்ச்சி ஆய்வு!
புற்றுநோய் : தாமிரபரணியைத் தொடர்ந்து நொய்யல் நீரிலும் அதிகம் உள்ள புற்றுநோய் காரணிகள் – அதிர்ச்சி ஆய்வு!

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் மருத்துவர் புகழேந்தி கூறியதாவது

புற்றுநோய் காரணிகள்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுஜிதா, பிரபு மற்றும் சிந்து ஆகிய மூவரும் தாமிர பரணி ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தங்கள் ஆய்வில் வெளியிட்டிருந்தனர். இதே மூவர் குழு தமிழகத்தின் நொய்யல் ஆற்றங்கரையில் நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரி மலையில் தோன்றி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை வளப்படுத்தி காவிரியுடன் கலக்கும் இந்த ஆற்றங்கரையோரங்களில் உள்ள நிலத்தடி நீர் மற்றும் ஆற்று நீர் இரண்டிலுமே காட்மியம், குரோமியம், லெட், நிக்கல், ஆர்சனிக் போன்ற எண்ணற்ற ஹெவி மெட்டல்களும், நைட்ரைட்ஸ், நைட்ரேஸ், பாஸ்பேட் போன்ற புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருட்களும் உள்ளதாக ஆய்வில் தெரிகிறது. இதனால் இங்கும் புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் உள்ளது. இதனால் இரண்டுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்கு காரணங்களாக ஆற்றில் சாக்கடை கழிவு நீர் கலப்பது, உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கலப்பது மற்றும் தொழிற்சாலை கழிவுகள் கலப்பது காரணமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்களில் இந்த பாதிப்பு அதிகம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு

மேலும் கோயமுத்தூர் வடக்கு மற்றும் தெற்கு, ஈரோடு தாலுகா ஆகிய இடங்களிலும் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகள் காரணமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

புற்றுநோய் பாதிப்பில் தமிழகம் முதல் நிலையில் உள்ளதால், இதுகுறித்து அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். தமிழக சுகாதார துறையினர் அதற்கான முயற்சிகள் நீர்நிலைகளில் உள்ள பாதிப்புக்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், பாதிப்பு என்பது அறிவியல் ஆதாரங்களுடன் நிரூபணமாகியுள்ளது.

சென்னையின் நிலை

சென்னையில் காற்று மாசுபாடு காரணமாக நுரையீரல் புற்றுநோய் அதிகரித்துள்ளது. தொழிற்சாலை அதிகம் உள்ள இடங்களில், குறிப்பிட்ட ஒரே புற்றுநோய் அதிகம் ஏற்பட்டால் அதற்கு அந்த சூழ்நிலைதான் காரணமாகிறது. அதையும் ஒரு காரணமாக நாம் கணக்கில் கொள்ளவேண்டும். தமிழக்கத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உள்ளது தெளிவாக தெரியும் நிலையில் இதுகுறித்து மக்கள் பங்களிப்புடன் அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதிக்கப்படும் அப்பாவி மக்களை காக்க வேண்டும்.

வருமுன் காப்பதே சிறந்தது

புற்றுநோயை வருமுன் காப்பதே சிறந்தது. வந்தவுடன் அதற்கு மருத்துவ ரீதியான தீர்வுகளை நோக்கி செல்வதற்கு பதில் வருமுன் காப்பதே சிறந்தது. இந்த பாதிப்புக்களை ஏற்படுத்தும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுத்த விவரங்களும் இல்லாத நிலையில் அரசுதான் முன்வந்து அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே நல்ல குடிநீர் அடிப்படை உரிமை என்பதை அரசு உணர்ந்து மக்களுக்கு அதை நல்ல முறையில் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.

இவ்வாறு மருத்துவர் புகழேந்தி கூறியுள்ளார்.