இந்த தீபாவளிக்கு 7 கப் பர்ஃபி செய்யலாமா? செய்வது மிகவும் எளிது; சுவையும் அலாதியானது!
இந்த தீபாவளிக்கு 7 கப் பர்ஃபி செய்யலாமா? செய்வது மிகவும் எளிது. சுவையும் அலாதியானது. அது எப்படி என்று பாருங்கள்.

தீபாவளி வந்துவிட்டாலே போதும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரே கொண்டாட்டம்தான். ஒருபுறம் குழந்தைகளுக்கு பட்டாசு, புத்தாடை என குதூகலம், மறுபுறத்தில் தீபாவளி பலாகாரங்கள் என கொண்டாட்டம். பண்டிகைகள் என்பது கொண்டாட்டங்களின் உச்சமாக தீபாவளி கொண்டாட்டம் உள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும், இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் ஒரு பெரும் பண்டிகையாக தீபாவளி உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் பண்டிகை தீபாவளி. பண்டிகை கொண்டாட்டங்கள் என்றால், அனைவரும் குழந்தையாகவே மாறிவிடுகிறார்கள். அந்தளவுக்கு தீபாவளி கொண்டாட்டங்கள் இருக்கும். தீபாவளி நாளில் அனைவரும் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடைகள் உடுத்தி, மத்தாப்புக்கள் கொழுத்தி, பட்டாசுகள் வெடித்து, பலகாரங்கள் சாப்பிட்டு என நாள் முழுவதிலும் ஒரே உற்சாகமாக இருக்கும். வாழ்வில் ஆயிரம் இன்பங்கள், துன்பங்கள் இருந்தாலும், பண்டிகைகள் நம்மை மகிழ்விக்கும் மாற்றாக உள்ளன. இந்த நாளில் அனைவருக்கும் இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்கிறோம். சொந்தங்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கிறோம். பண்டிகைகள் வாழ்வில் மகிழ்ச்சியை நிரப்புவதாக இருக்கிறது. அந்த வகையில் உங்கள் பண்டிகை நாளை மேலும் சிறப்பாக்க இந்த 7 கப் பர்ஃபியை செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
நெய் – ஒரு கப்
கடலை மாவு – ஒரு கப்