கொத்துக்கொத்தாக கொட்டும் முடி! இந்த எண்ணெயை நீங்களே கலந்து பயன்படுத்தினால் அடர்ந்து வளரும்! எப்படி செய்வது?
கொத்துக்கொத்தாக கொட்டும் முடியால் கவலையா? இந்த எண்ணெயை நீங்களே கலந்து பயன்படுத்தினால் அடர்ந்து வளரும். எப்படி செய்வது என்று பாருங்கள்.

உங்கள் தலையில் இருந்து கொத்துக்கொத்தாக முடி கொட்டுகிறது எனில், அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் வீட்டிலே செய்யக்கூடிய தீர்வுகளும் உள்ளன. தலைமுடி ஆரோக்கியத்துக்கான எண்ணெயை நீங்கள் வீட்டிலே தயாரிக்க முடியும். அதற்கு தேவையான எண்ணெய்கள் நாட்டு மருந்து கடைகள் அல்லது சூப்பர் மார்க்கெட்களிலுமே கிடைக்கும். அவற்றை தேடி தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளவேண்டும். இந்த எண்ணெய்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கும் உதவும். இது முடி உதிர்வைத்தடுத்து, அடர்த்தி குறைவதை தடுக்கும். இதற்கு தேவையான எசன்சியல் எண்ணெய் மற்றும் கேரியர் எண்ணெயை தேடி வாங்கிகொள்ளவேண்டும். இவையனைத்தும் உங்களின் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கும், தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும், ஒட்டுமொத்த தலைமுடியின் தரத்தை அதிகரிக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்கை தீர்வை நீங்கள் வீட்டிலே முயற்சிக்கலாம்.
தேவையான பொருட்கள்
கேரியர் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் (இது உங்கள் தலைமுடியை கண்டிஷனிங் செய்கிறது. இதற்கு தலைமுடி சேதத்தை தடுக்கும் ஆற்றல் உள்ளது.
ஜோஜோபா எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் (தலையில் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. தலைமுடியின் வேர்க்கால்களில் எண்ணெயை தக்கவைக்கிறது.
