Brinjal Rice : கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட பொடி போட்டு செய்யும் இந்த சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள்! 2 ரெசிபி!
Brinjal Rice : கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட பொடி போட்டு செய்யும் இந்த சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள். நிமிடத்தில் செய்து லன்சுக்கு கட்டிக்கொடுத்துவிடலாம்.
கறிவேப்பிலை, மல்லித்தழைப் போல் பெரும்பாலானோர் ஒதுக்கி வைக்கும் காய்கறிகளுள் ஒன்று கத்தரிக்காய். ஆனால் இதுபோல் பொடிபோட்டு சாதம் செய்து கொடுத்தால், மீண்டும், மீண்டும் பொடி வேண்டும் என்று வாங்கி விரும்பி சாப்பிடுவார்கள்.
கத்தரிக்காய் சாதத்துக்கு பொடி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
உளுந்து – ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
கடலை – ஒரு ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
தேங்காய் துருவல் – கால் கப்
வரமிளகாய் – 4
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
கத்தரிக்காய் சாதம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
கத்தரிக்காய் – 4 (நீளவாக்கில் நறுக்கியது)
பெருங்காய்த்தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – சிறிதளவு
வேக வைத்த சாதம் – ஒரு கப்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், கடுகு, சீரகம் சேர்த்து பொரியவிடவேண்டும். அடுத்து கறிவேப்பிலை தாளித்து, பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.
அடுத்து தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்கவேண்டும். பின்னர் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள் தூவவேண்டும். கத்தரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். கத்தரிக்காய் சுருண்டு வந்தவுடன் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக பச்சை வாசம் போதும் வரை வதக்கவேண்டும்.
கடைசியாக மல்லித்தழை, வேக வைத்த சாதத்தை சேர்த்து பிரட்டி எடுத்தால், சூப்பர் சுவையான கத்தரிக்காய் சாதம் தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு வறுவல் அல்லது வெறும் தயிர் பச்சடி கூடி போதுமானது.
இது சிறந்த லன்ச் பாக்ஸ் ரெசிபியாகும். கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். கத்தரிக்காய் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் அல்லது அரிப்பை ஏற்படுத்தும் என்பவர்கள் அந்தக்காயை ஒதுக்கிவிடுவார்கள்.
ஆனால், அதுபோன்ற பிரச்னைகள் எதுவும் இல்லாதவர்கள் ஒதுக்கி வைக்கவேண்டிய தேவையில்லை. இதுபோல் சாதம் செய்து சாப்பிடலாம். கத்தரிக்காயும் எண்ணற்ற நன்மைகளைத் தரக்கூடிய ஒரு காய் தான்.
கத்தரிக்காயின் நன்மைகள்
கத்தரிக்காய் சாம்பாருக்கு நல்ல சுவையை அளிக்கக்கூடிய காய்களுள் ஒன்று. கத்தரிக்காய், முருங்ககைக்காய், மாங்காய் இந்த மூன்று காய்களையும் சேர்த்து வைக்கக்கூடிய சாம்பார் மிகவும் சுவையானதாக இருக்கும்.
அதனுடன் பலாக்கொட்டையும் சேர்த்துக்கொள்ள எந்தவிட மசாலாக்களும் சேர்க்காமலே சாம்பார் சுவை அள்ளும்.
இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸ்டன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலை பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற நீண்ட கால நோய்கள் வராமல் தடுக்கும்.
ஆந்தோசியனின் என்பது கத்தரிக்காயில் அதிகம் உள்ளது. இதில் உள்ள இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்தான் கத்தரிக்காய் இந்த நிறத்தை கொடுக்கின்றன. இது பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
இதய நோய்கள் வராமல் காக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எடை குறைப்பில் உதவுகிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது.
இதை எளிதாக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை வறுத்து சாப்பிடலாம். சாம்பார் வைத்து சாப்பிடலாம். சாம்பாரில் சேர்ததால் கூடுதல் சுவையை கொடுக்கிறது.
கத்தரிக்காய் சிலருக்கு சரும அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே சரும பிரச்னைகள் உள்ளவர்கள் கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்க்கக்கூடாது.
கத்தரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உள்ளவர்களும் கத்தரிக்காயை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றபடி அனைவரும் வாரத்தில் ஒருமுறை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய காய்தான் கத்தரிக்காய்.
டாபிக்ஸ்