சுரைக்காய் சட்னி : சுரைக்காயே தொடாதவர்கள் கூட அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள்; அதில் இப்படி ஒரு சட்னி செய்தால்…
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சுரைக்காய் சட்னி : சுரைக்காயே தொடாதவர்கள் கூட அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள்; அதில் இப்படி ஒரு சட்னி செய்தால்…

சுரைக்காய் சட்னி : சுரைக்காயே தொடாதவர்கள் கூட அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள்; அதில் இப்படி ஒரு சட்னி செய்தால்…

Priyadarshini R HT Tamil
Updated Apr 13, 2025 11:32 AM IST

சுரைக்காய் சட்னி : எனவே அதற்கு நீங்கள் இதுபோல் துவையல் அரைத்துக்கொடுக்கலாம். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த துவையலை நீங்கள் சாதம் மற்றும் இட்லி, தோசை உள்ளிட்ட டிஃபனுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட முடியும். இந்த சுரைக்காய் சட்னியை செய்வது எப்படி என்று பாருங்கள்.

சுரைக்காய் சட்னி : சுரைக்காயே தொடாதவர்கள் கூட அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள்; அதில் இப்படி ஒரு சட்னி செய்தால்…
சுரைக்காய் சட்னி : சுரைக்காயே தொடாதவர்கள் கூட அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள்; அதில் இப்படி ஒரு சட்னி செய்தால்…

தேவையான பொருட்கள்

• எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• சுரைக்காய் – 2 கப்

• தக்காளி – 2 (மிதமான அளவு)

• உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

• எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• கடுகு – கால் ஸ்பூன்

• உளுந்து – கால் ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• வர மிளகாய் – 1

சட்னிக்கான மசாலா

• எண்ணெய் – 2 ஸ்பூன்

• கடலை பருப்பு – 2 ஸ்பூன்

• உளுந்து – 2 ஸ்பூன்

• வர மிளகாய் – 2

• இஞ்சி – ஒரு சிறிய துண்டு

• பச்சை மிளகாய் – 1

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் கடுகு மற்றும் உளுந்து சேர்த்து பொரிய விடவேண்டும். அடுத்து கறிவேப்பிலை மற்றும் வர மிளகாய் சேர்த்து பொரிய விடவேண்டும். இந்த தாளிப்பை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

2. ஒரு கடாயில் எண்ணெய் சூடானவுடன் கடலை பருப்பு, உளுந்து, வர மிளகாய், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும். பருப்புகள் அனைத்தும் பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும்.

3. கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், சுரைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவேண்டும். காய் நன்றாக வேக வேண்டும். கிட்டத்தட்ட 5 முதல் 10 நிமிடங்கள் வதக்கவேண்டும்.

4. அடுத்து தக்காளியை சேரத்து நன்றாக மசித்துக்கொள்ளவேண்டும். அடுத்து மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிடவேண்டும். சுரைக்காய் நன்றாக வெந்து வரும் அளவுக்கு வேகவைக்கவேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு, அதை ஆறவிடவேண்டும்.

5. அனைத்தும் ஆறியவுடன், சுரைக்காய் கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு போட்டு அரைத்துக்கொள்ளவேண்டும். அடுத்து மசாலாக்களையும் சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் வழித்துக்கொள்ளவேண்டும்.

6. அடுத்து தாளிப்பை அதில் சேர்க்கவேண்டும். கலந்து விட்டால் சூப்பர் சுவையான சட்னி தயார். இதை இட்லி, தோசையுடன் பரிமாறலாம். சாப்பாட்டுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

இந்த சட்னியை ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இதை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.