பிரியாணி : பிரியாணி பிரியரா நீங்கள்? எனில் இந்த ரகசியங்களை தெரிஞ்சுக்கங்க, நல்ல பிரியாணி சாப்பிடலாம்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பிரியாணி : பிரியாணி பிரியரா நீங்கள்? எனில் இந்த ரகசியங்களை தெரிஞ்சுக்கங்க, நல்ல பிரியாணி சாப்பிடலாம்

பிரியாணி : பிரியாணி பிரியரா நீங்கள்? எனில் இந்த ரகசியங்களை தெரிஞ்சுக்கங்க, நல்ல பிரியாணி சாப்பிடலாம்

Priyadarshini R HT Tamil
Updated May 06, 2025 12:09 PM IST

பிரியாணி : பிரியாணி பிரியரா நீங்கள்? எனில் இந்த ரகசியங்களை தெரிஞ்சுக்கங்க, நல்ல பிரியாணி சாப்பிடலாம்

பிரியாணி : பிரியாணி பிரியரா நீங்கள்? எனில் இந்த ரகசியங்களை தெரிஞ்சுக்கங்க, நல்ல பிரியாணி சாப்பிடலாம்
பிரியாணி : பிரியாணி பிரியரா நீங்கள்? எனில் இந்த ரகசியங்களை தெரிஞ்சுக்கங்க, நல்ல பிரியாணி சாப்பிடலாம்

பிரியாணி

தெற்காசியாவின் மிக பிரபலமான உணவாக பிரியாணி உள்ளது. இது முஸ்லிம்களுடன் தொடர்புடைய உணவாக இருப்பதால், பாய் வீட்டு பிரியாணிக்கு மவுசு அதிகம். இந்தியாவில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் பிரியாணி அதிகம் இடம்பெறுகிறது. பிரியாணிக்கு என்றே குறிப்பிட்ட சில கடைகளும் உள்ளன. அதில் பிரியாணி சாப்பிட மக்கள் கூட்டமும் அலைமோதும். இவைகளால் இந்தியாவின் பிரபல உணவாக பிரியாணி உள்ளது. இந்த பிரியாணியின் சுவையை அதிகரிப்பதே அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான்.

இந்த பிரியாணியை செய்வதற்கு என்று ஒரு பக்குவம் உள்ளது. அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

பிரியாணி செய்யும் பக்குவம்

1. பாத்திரம் சூடானவுடன்தான் எண்ணெயையே சேர்க்கவேண்டும். நீங்கள் எண்ணெயை சேர்த்தவுடன் அது நன்றாக சூடாகவேண்டும். அதில் இருந்து மெல்லிய புகை வரவேண்டும்.

2. அடுத்து பெரிய வெங்காயத்தைச் சேர்க்கவேண்டும். அதை நல்ல பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அதன் ஈரப்பதம் முற்றிலும் நீங்கவேண்டும்.

3. அடுத்து பச்சை மிளகாயை சேர்த்து அது நன்றாக வெடிக்கவேண்டும். அடுத்து தான் இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்க்கவேண்டும்.

4. பெரிய வெங்காயம் பொன்னிறமானவுடன் நீங்கள் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்தால்தான், ஒட்டாமல் இருக்கும்.

5. அடுத்து மல்லித்தழை தூவவேண்டும். மல்லித்தழை தூவி வதக்கிய பின்னர்தான், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு, ஏலக்காய், கல்பாசி, ஜாவித்திரி என அனைத்தும் சேர்க்கவேண்டும்.

6. அடுத்து தயிர் சேர்க்கவேண்டும். பின்னர்தான் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பிரயாணி மசாலா அல்லது கரம் மசாலாவைச் சேர்க்கவேண்டும். அடுத்து புதினா சேர்க்கவேண்டும். இவையனைத்தும் நல்ல பச்சைவ வாசம் போனபின்னர் தனியாக பூண்டு பேஸ்ட்டை மட்டும் அரைத்து சேர்க்கவேண்டும்.

7. அடுத்து மட்டன் அல்லது சிக்கன் அல்லது காய்கறிகள் என எதை சேர்க்க விரும்புகிறீர்களோ அதைச் சேர்க்கவேண்டும்.

8. கடைசியாக தக்காளியை சேர்க்கவேண்டும். தக்காளி அந்த கறியில் இறங்கும்போதுதான் கறி நல்ல மிருதுவாக வேகும். கடைசியாகத்தான் தண்ணீர் ஊற்றி வேண்டும். தண்ணீர் ஊற்றும்போது கறி அல்லது காய்கறி எதுவாக இருந்தாலும் அது 50 சதவீதம் வெந்திருக்கவேண்டும்.

9. தண்ணீரும் கொதித்த பின்னர்தான் அரிசியைச் சேர்க்கவேண்டும். அரிசி வெந்து வரும்போது தம் போடவேண்டும். குறைந்தபட்சம் அரை மணி நேரம் தம் போடவேண்டும்.

இந்த முறையில் ஒருமுறை பிரியாணி செய்து பாருங்கள். உங்கள் வீட்டு பிரியாணியின் மணம் தெருவே மணக்கச் செய்யும். இந்த பிரியாணியை உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் ரசித்து, ருசித்து சாப்பிடுவார்கள்.