Health Tips: உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகையாம் கோவைக்காய்!

I Jayachandran HT Tamil
Mar 29, 2023 10:13 PM IST

உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகையாம் கோவைக்காய் குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகையாம் கோவைக்காய்
உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகையாம் கோவைக்காய்

ட்ரெண்டிங் செய்திகள்

கோவைக்காயில் நிறைந்துள்ள ஏராளமான சத்துகளும் மருத்துவ நிவாரணங்கள் பற்றியும் இங்கு பார்க்கலாம்.

தாய்ப்பால் பற்றாத போது இளந்தாய்மார்களுக்கு பால் சுரக்கச் செய்யும். கோவைக்காய் செடியின் வேர் வாந்தியை நிறுத்தும் ஆற்றல் கொண்டது. கோவைக்காய் வேர் கிழங்கு போல திரண்டு இருக்கும். கிழங்கு புரோட்டோ சோவா என்னும் நோய்தரும் ஒட்டுண்ணிகளை ஒழிக்கக் கூடிய உன்னதமான மருந்தாகிறது.

கோவைக்காய் இலைச்சாறு கடும் வலியைத் தணிக்கக் கூடியது. கோழையைக் கரைத்து வெளியேற்றும் வல்லமை உடையது. கோவை இலை தோல் நோய்களுக்கு மேற்பூச்சு மருந்தாகிறது.

தோலில் உண்டாகும் அரிப்பு, கொப்புளங்கள், வேர்க்குரு, வெடிப்புகள் விலகிப்போக உன்னதமான மருந்தாக கோவைக்காய் இலை உபயோகப் படுகின்றது.

கோவைப் பழங்கள், இலைகள், வேர்கள் அனைத்தும் சர்க்கரை நோயைத் தணிக்கும் தன்மை யுடையது.

கோவைக்காய் நாடித்துடிப்பு குறைந்த போதும் வலிப்பு ஏற்படும் போதும், ஈரல் நோயுற்ற போதும் மருந்தாகப் பயன்படுகின்றது. கோவைக்காய் இலைச் சாற்றை விஷக்கடிகளுக்குப் பூசலாம் என்றும், கோவை இலை உஷ்ணத்தையும், வியர்வையையும் உண்டாக்குந்தன்மையுடையது என்றும், இலைத் தீநீர் நீரடைப்பு, ஆறாப் புணக்கள், சொறி, சிரங்கு, இருமல் இவற்றைப் போக்கும் என்றும் சித்த மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன.

கோவையின் இலையை சாப்பிடுவதால் உடம்பின் சூடு தணியும் , நீரடைப்பு, கரப்பான், இருமல் இவைகள் குணமாகும்,. இலைச் சாற்றை வெண்ணெய்யோடு குழைத்துப் பூச சிரங்கு, ரணம் இவைகள் விரைவில் ஆறும். கோவைக்காய் வேர் கிழங்கு நீரிழிவு, கோழை, குட்டம், இரைப்பு, நாப்புண் இவைகளும் குணமாகும்.

கோவைக் காயில் அஸ்கார்பிக் ஆசிட் என்று சொல்லப்பெறும் விட்டமின் ‘சி’ ,

கால்சியம் எனப்படும் சுண்ணாம்புச் சத்து, கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்து, கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, ரிபோஃப்ளேவின், நியாசின், தயாமின் எனப்படும் ஊட்டச்சத்துகள், பொட்டாசியம், புரதச்சத்து,

நீர்ச்சத்து போன்றவை அடங்கியுள்ளன.

கோவைக்காய் இலைகள் சர்க்கரை நோயாளி களுக்கு ஓர் அற்புத மருந்தாகிறது. சர்க்கரை நோய் அல்லாதவர்க்கு சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

தோல் வியாதிகளான தொழுநோய், சோரியாசிஸ், ஸ்கேபிஸ் எனப்படும் நமைச்சல், அரிப்பு, நீர்வடிதல் போன்ற கடுமையான நாட்பட்ட நோய்களுக்கு உள் மருந்தாகவும் வெளிப்பூச்சு மருந்தாகவும் கோவைக்காய் இலைப் பயன் தருகிறது.

பேதி, மஞ்சள்காமாலை போன்ற நோய்களையும் குணப்படுத்தவல்லது கோவைக் காயின் பூக்கள் மஞ்சள் காமாலை நோய்க்கு மகத்தான மருந்தாகிறது.

நுரையீரல் கோளாறுகளையும் சுவாசப் பாதைச் சளியையும் போக்க கோவைக்காயை சித்த மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இலை, பழங்கள், காய்கள் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.

கோவைக்காய் இலைச்சாறு பத்துமில்லி எடுத்து சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து உள்ளுக்கு காலை மாலை என இரண்டு வேளையும் சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் தணியும், கண்கள் குளிர்ச்சி பெறும்.

ஆறாப் பெரும் புண்கள், சொறி சிரங்குகள் விரைவில் ஆறும். உடலின் வெட்டைச்சூடு, நீரடைப்பு, நீர்பிரிதலில் எரிச்சல், ஈரல் வீக்கம், மஞ்சள் காமாலை ஆகியனவும் குணமாகும்.

கோவைக்காயை வாயிலிட்டு மென்று தின்பதால் வாய்ப்புண் விரைவில் ஆறும். நாக்கு அச்சரம் அகலும், பற்களில் இருந்து ரத்தம் கசிதல், சீழ்பிடித்தல், பல் கூச்சம், பல் ஆட்டம் ஆகியனவும் குணமாகும்.

கோவைக்காய் இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆற வைத்து நாட்பட்ட ஆறாத புண்கள், நச்சு நீர்வடிந்து நமைச்சலுடன் நாற்றம் வீசும் புண்கள் ஆகியனவும் ஆறும் விதத்தில் அவற்றைக் கழுவி வர விரைவில் ஆறிவிடும்.

கோவைக்காய் இலையை மைய அரைத்து அதனோடு வெண்ணெய் சேர்த்துக் குழைத்து புண்கள், அடிபட்ட காயங்கள், தோல் நோய்கள் ஆகியவற்றின் மேல் பூச விரைவில் ஆறிவிடும்.

கோவைக்காய் இலையைக் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரில் வேளைக்கு 35 கிராம் வரைக் கொடுப்பதாலோ அல்லது கோவை இலைகளை நிழலில் காய வைத்து பொடித்து சூரணமாக சிறிய அளவு அன்றாடம் மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் நீங்குவதோடு புண்கள் ஆறும், நீரடைப்பு போகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்