Skin Glow Juice: பருக்களை போக்கி முகத்தை பளபளப்பாக செழிப்புடன் வைக்கும் ஜூஸ்!
பருக்களை போக்கி முகத்தை பளபளப்பாக செழிப்புடன் வைக்கும் ஜூஸ் பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.
கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு இரண்டும் சருமத்தை அழகாக மாற்ற பயன்படுகிறது. இந்த சாறு சருமத்துக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பார்ப்போம்.
ட்ரெண்டிங் செய்திகள்
பளபளப்பான மற்றும் குறைபாடுகள் இல்லாத சருமம் என்பது பொதுவாக அனைவரின் கனவாக இருக்கும். இதற்காக நாம் அனைத்து விதமான செயல்களையும் மேற்கொள்கிறோம். நாம் விலையுயர்ந்த பொருட்களையும் பயன்படுத்துகிறோம், ஆனால் சருமத்தின் அழகு என்பதும் நம் வாழ்க்கை முறையில் நாம் அன்றாடம் சேர்த்து கொள்ளும் உணவு வகையைப் பொறுத்தது தான்.
பல சமயங்களில், வறுத்த உணவுகள் அல்லது காரமான உணவுகள் போன்ற நமது உணவுப் பழக்கங்களும் நமது சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும், இவற்றை சாப்பிடுவதால் உண்டாகும் நேரடி விளைவு தான் நம் முகத்தில் பருக்கள் வடிவத்தில் தெரிய ஆரம்பிக்கும். அதனால்தான் சருமத்தில் இருந்து நச்சுக்களை நீக்குவதற்கும் மற்றும் அதன் அழகை பராமரிப்பதற்கும் ஏதாவது ஒரு நல்ல பொருளை நாம் உணவில் சேர்க்க வேண்டும். இங்கு நாம் கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு பற்றி கூறுகிறோம், இது சருமத்தை பொலிவாக வைப்பது மட்டுமல்லாமல், சருமத்தை மேலும் அழகாக மாற்றும்.
கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சருமத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். அதை தயாரிக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையைப் பின்பற்றலாம்
கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு செய்யத் தேவையானவை-
கொத்தமல்லி இலைகள் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
தேவையான தண்ணீர்
கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு செய்முறை விளக்கம்
மிக்ஸியில் கொத்தமல்லி தழை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்யவும்.
இந்த விழுது சரியாக அரைபடவில்லை என்றால், அதில் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
இந்த சாற்றை நன்றாக வடிகட்டவும் அல்லது வடிகட்டாமலும் பயன்படுத்தலாம், பின்னர் அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
சுவைக்காக இந்த சாற்றில் கருப்பு உப்பு அல்லது சாட் மசாலாவையும் சேர்க்கலாம். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும்.
கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சருமத்தில் இருந்து நச்சுக்களை நீக்குகிறது. சருமத்தின் துவாரங்களில் ஊடுருவல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற நல்ல செயல்களை செய்து, சருமத்தின் இறந்த செல்களை அகற்றி, முகத்தின் பொலிவை பராமரிக்க உதவும். இதை தவிர, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதன் மூலம் சருமத்துக்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கிறது. இதன் காரணமாக உங்கள் சருமம் இளமையாக இருப்பதுடன், அதில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் மாசு மருக்கள் மறைய ஆரம்பிக்கும்.
கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு தொடர்ந்து குடிப்பது முகப்பரு அல்லது வடுக்கள், தழும்புகள் ஆகிய பிரச்னையிலிருந்து விடுபட உதவுகிறது. இது இரத்தத்தை சுத்திகரிக்க செயல்படுகிறது, இது உடலின் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் பருக்களை குணப்படுத்துகிறது. முகப்பருவை ஒழிக்க, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் நேரடியாக தடவலாம். இந்த சாற்றை முகப்பருக்கள் அல்லது வடுக்கள் மீது தடவி சிறிது நேரம் வைத்திருந்து முகத்தை தண்ணீரில் கழுவவும். விரைவில் அனைத்தும் மறைந்து சருமத்தில் பொலிவு உண்டாகும்
இந்த கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு முற்றிலும் இயற்கையானது. எனவே, சருமத்திற்கு பளபளப்பைக் கிடைக்க வேண்டும் என்றால், இதைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்