ஆவாரம் பூவின் நற்குணங்கள் : சர்க்கரை நோய் முதல் எத்தனை நோய்களுக்கு மருந்து இந்த ஆவாரை? மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆவாரம் பூவின் நற்குணங்கள் : சர்க்கரை நோய் முதல் எத்தனை நோய்களுக்கு மருந்து இந்த ஆவாரை? மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!

ஆவாரம் பூவின் நற்குணங்கள் : சர்க்கரை நோய் முதல் எத்தனை நோய்களுக்கு மருந்து இந்த ஆவாரை? மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!

Priyadarshini R HT Tamil
Updated Apr 11, 2025 03:21 PM IST

ஆவாரம் பூவின் நற்குணங்கள் : சர்க்கரை நோய் முதல் எத்தனை நோய்களுக்கு மருந்து இந்த ஆவாரை? மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!

ஆவாரம் பூவின் நற்குணங்கள் : சர்க்கரை நோய் முதல் எத்தனை நோய்களுக்கு மருந்து இந்த ஆவாரை? மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!
ஆவாரம் பூவின் நற்குணங்கள் : சர்க்கரை நோய் முதல் எத்தனை நோய்களுக்கு மருந்து இந்த ஆவாரை? மருத்துவர் கூறுவதைக் கேளுங்கள்!

‘ஆவாரைப் பூத்திருக்கச் சாவரை கண்டதுண்டா’ என்பதைக் கேட்டூள்ளீர்களா? ஆவாரம் பூ என்பது சிறந்த காய கற்ப மருந்து. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி பல்வேறு நன்மைகளைக் கூறுகிறது. ஆவாரம் பூ உடலுக்கு தரும் நன்மைகள் குறித்து மருத்துவர் காமராஜ் தனது அண்மை வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது

ஆவாரம் பூவில் உற்ற நற்குணங்கள்

‘ஆவாரைப் பூத்திருக்கச் சாவரைக் கண்டதுண்டா?’ ஆவாரம் பூ ஒரு மிகச் சிறந்த காய கற்ப மூலிகை. காயம் என்றால் உடல் கற்பம் என்றால் நரை, திரை, மூப்பு, பிணி, மரணம் என்ற ஐந்தையும் குறிப்பிடும். நரை என்றால் தலை முடி நரைத்தல், திரை என்றால் தோல் சுருங்குதல், மூப்பு என்றால் வயது முதிர்தல், பிணி என்றால் நோய், மரணம் என்றால் இறப்பு என இந்த ஐந்தையும் வராமல் தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த ஆவாரை மூலிகைக்கு உள்ளது.

ஆவாரம் பூ சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த மருந்து. வெண் படை, வெண் புள்ளி என்ற சரும நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்து. மூட்டு வலி, ஆஸ்துமா, கண் நோய்களுக்கு என சகல ரோக நிவாரணியாக உள்ளது. 4448 நோய்களையும் தீர்க்கக்கூடியதாக இந்த ஆவரை உள்ளது. இந்த மொத்தச் செடியையும் உட்கொள்ள முடியும். அதாவது வேர், தண்டு, இலை, பூ, மகரந்தம், காய் என அத்தனையும் மருந்து. இதன் மலம் சம்மூலம் தயாரிக்கப்படுகிறது.

ஆவாரைச் சம்மூலம் தயாரிப்பது எப்படி?

இவையனைத்தையும் சேகரித்து நிழலில் உலர்த்திக்கொள்ளவேண்டும். நன்றாக காய்ந்தவுடன், அனைத்தையும் அரைத்து சலித்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். இதை தினமும் காலை மற்றும் மாலை இருவேளையும் 2 முதல் 4 கிராம் சூடான தண்ணீரில் அல்லது தேனில் கரைத்து தொடர்ந்து சாப்பிடவேண்டும். அவ்வாறு சாப்பிடும்போது, உங்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். இதய நோய் வராது, மூட்டு வலி தீரும். கண் நோய் தீரும். இப்படி ஒட்டுமொத்த உடலையும் பாதுகாக்கக்கூடிய அற்புதமான மூலிகைதான் ஆவாரை மூலிகை. இதை பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.