அழகு குறிப்புகள் : கோடை வந்தால் போதும்! இந்த சருமமும், தலைமுடியும் படும்பாடுகள் என்னவென்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அழகு குறிப்புகள் : கோடை வந்தால் போதும்! இந்த சருமமும், தலைமுடியும் படும்பாடுகள் என்னவென்று பாருங்கள்!

அழகு குறிப்புகள் : கோடை வந்தால் போதும்! இந்த சருமமும், தலைமுடியும் படும்பாடுகள் என்னவென்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Updated May 10, 2025 05:32 PM IST

அழகு குறிப்புகள் : கோடை வந்தால் சருமமும், தலைமுடியும் கடுமையாக பாதிக்கப்படும். அதனால் என்னவாகிறது பாருங்கள்.

அழகு குறிப்புகள் : கோடை வந்தால் போதும்! இந்த சருமமும், தலைமுடியும் படும்பாடுகள் என்னவென்று பாருங்கள்!
அழகு குறிப்புகள் : கோடை வந்தால் போதும்! இந்த சருமமும், தலைமுடியும் படும்பாடுகள் என்னவென்று பாருங்கள்!

முகத்தில் தொற்றுகள்

கோடையில் முகத்தில் ஏற்படும் வறட்சியால் சருமத்தில் தொற்றுகள் ஏற்படலாம். இது குறிப்பாக கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்களை அதிகம் பாதிக்கும். இங்கு எளிதில் பாக்டீரியாக்களும், பூஞ்ஜைகளும் வளரும். இது உங்களுக்கு முகத்தில் உள்ள சருமத்தில் தொற்றுக்கள் மற்றும் ரேஷ்கள் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்தும்.

நீர்ச்சத்துக்களை இழந்த பொலிவிழந்த சருமம்

காற்றில் அதிகம் ஈரப்பதம் இருந்தாலும், நமது சருமம் வறட்சியடையும். நீங்கள் அதிகளவு தண்ணீர் பருகவில்லையென்றால், அது உங்களின் சருமத்தை பொலிவிழக்கச் செய்யும். சருமம் உயிரற்று காணப்படும்.

குறைந்த பட்ச சரும பராமரிப்பு

உங்கள் சருமத்தை காக்க நீங்கள் எண்ணற்ற சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தக் கூடாது. ஒரு நல்ல கிளென்சர், சன்ஸ்கிரீன் மற்றும் மாய்சுரைசர் ஆகியவற்றை பயன்படுத்தினால் போதும்.

தலைமுடியின் வேர்க்கால்களில் தொற்றுகள்

முகத்தில் உள்ள சருமத்தைப் போலவே, தலைமுடியின் வேர்க்கால்களிலும், சில தொற்றுகள் கோடை மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும். வியர்வை மற்றும் ஈரப்பதம் தொடர்ந்து தலையில் இருந்துகொண்டே இருப்பதால், அங்கு எளிதில் பாக்டீரியவினால் தொல்லைகள் ஏற்படும். இது தலையில் அரிப்பு, எரிச்சல் மற்றும் பொடுகுத் தொல்லை போன்றவற்றை ஏற்படும்.

அதிக தலைமுடி உதிர்வு

நீங்கள் கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் நபர் என்றால், உங்களுக்கு கோடைக் காலங்களில் அதிகளவில் முடி உதிர்வு ஏற்படும். தலை முடியின் வேர்க்கால்களை ஈரப்பதம் மோசமடையச் செய்யும். தலைமுடியின் வேர்க்கால்களில் தொடர்ந்து இருக்கும் ஈரப்பதமும், வியர்வையும் தலைமுடி உதிர்வை அதிகரிக்கும்.

சுருள் முடியை சமாளிப்பது எப்படி?

நல்ல சுருள்களை சீராக்கும் சீரத்தை பயன்படுத்துங்கள். ஸ்டைலிங்குக்காக அதிக பராடெக்களை பயன்படுத்தாதீர்கள். சீரத்தை தலையில் பூசி சிக்கில்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது உங்களின் தலைமுடியை நேராக சுருளின்றி வைக்கும். இது உங்கள் தலைமுடியை அனைத்து இடங்களிலும் சீராக வைக்கும்.

தலைமுடியின் வேர்க்கால்கள் பாதுகாப்பு

உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களை சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு, நீங்கள் ஆன்டி டேன்டரஃப் ஷாம்பூவை நீங்கள் பயன்படுத்தவேண்டும். தலை குளித்தவுடனே காயவைத்துவிடவேண்டும். தலையை ஈரமின்றி பார்த்துக்கொள்ளவேண்டும். ஈரத்தோடு தலைமுடியை கட்டக்கூடாது. அது தொற்றை அதிகமாக்கும்.

முடி உதிர்வு பிரச்னைகளை தடுப்பது எப்படி?

அகலமான சீப்பை பயன்படுத்தவேண்டும். இது சிக்குகளை நீக்க ஏற்றது. அதேபோல் பெரிய பற்கள் உள்ள சீப்பும் சிக்குகளை நீக்க உதவும். அதை வைத்து உங்கள் தலைமுடியை நன்றாக சீவவேண்டும். அதிகம் சீவினால், நன்றாக சீவிக்கொள்ளவேண்டும்.