அழகு குறிப்புகள் : கோடை வந்தால் போதும்! இந்த சருமமும், தலைமுடியும் படும்பாடுகள் என்னவென்று பாருங்கள்!
அழகு குறிப்புகள் : கோடை வந்தால் சருமமும், தலைமுடியும் கடுமையாக பாதிக்கப்படும். அதனால் என்னவாகிறது பாருங்கள்.

அதிக ஈரப்பத அளவுகள், குறிப்பாக கோடை மற்றும் மழைக் காலங்களில் கடற்கரையோரங்களில் ஏற்படுவது, உங்கள் சருமத்தில் எண்ணெயை அதிகரிக்கிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படும். அதிகப்படியான வியர்வை மற்றும் சருமத்தில் ஏற்படும் அடைப்புகளால், நமது சருமத்தில் வீக்கம் மற்றும் முகப்பருக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதை நீங்கள் சில சப்ளிமென்ட்கள் மற்றும் கிளன்சர்கள் வைத்த சரி செய்ய முடியும். அவை என்னவென்று பாருங்கள்.
முகத்தில் தொற்றுகள்
கோடையில் முகத்தில் ஏற்படும் வறட்சியால் சருமத்தில் தொற்றுகள் ஏற்படலாம். இது குறிப்பாக கடற்கரையோரங்களில் வசிக்கும் மக்களை அதிகம் பாதிக்கும். இங்கு எளிதில் பாக்டீரியாக்களும், பூஞ்ஜைகளும் வளரும். இது உங்களுக்கு முகத்தில் உள்ள சருமத்தில் தொற்றுக்கள் மற்றும் ரேஷ்கள் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்தும்.
நீர்ச்சத்துக்களை இழந்த பொலிவிழந்த சருமம்
காற்றில் அதிகம் ஈரப்பதம் இருந்தாலும், நமது சருமம் வறட்சியடையும். நீங்கள் அதிகளவு தண்ணீர் பருகவில்லையென்றால், அது உங்களின் சருமத்தை பொலிவிழக்கச் செய்யும். சருமம் உயிரற்று காணப்படும்.