அவல் வடை : மொறு மொறு கிரிஸ்பியான அவல் வடையை இன்ஸ்டன்ட்டாக செய்யலாம்! உள்ளே மிருதுவாக இருக்கும்! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அவல் வடை : மொறு மொறு கிரிஸ்பியான அவல் வடையை இன்ஸ்டன்ட்டாக செய்யலாம்! உள்ளே மிருதுவாக இருக்கும்! இதோ ரெசிபி!

அவல் வடை : மொறு மொறு கிரிஸ்பியான அவல் வடையை இன்ஸ்டன்ட்டாக செய்யலாம்! உள்ளே மிருதுவாக இருக்கும்! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Updated Mar 26, 2025 01:48 PM IST

அவல் வடை : மொறு மொறு கிரிஸ்பியான அவல் வடையை இன்ஸ்டன்ட்டாக செய்யலாம்! உள்ளே மிருதுவாக இருக்கும்! இதோ ரெசிபி!

அவல் வடை : மொறு மொறு கிரிஸ்பியான அவல் வடையை இன்ஸ்டன்ட்டாக செய்யலாம்! உள்ளே மிருதுவாக இருக்கும்! இதோ ரெசிபி!
அவல் வடை : மொறு மொறு கிரிஸ்பியான அவல் வடையை இன்ஸ்டன்ட்டாக செய்யலாம்! உள்ளே மிருதுவாக இருக்கும்! இதோ ரெசிபி!

தேவையான பொருட்கள்

• அவல் – 2 கப்

• சீரகம் – ஒரு ஸ்பூன்

• இஞ்சி – கால் இன்ச்

• பச்சை மிளகாய் – 1

• மல்லித்தழை – ஒரு ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• உப்பு – தேவையான அளவு

• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

• எண்ணெய் – தேவையான அளவு

• அரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன்

• தயிர் – கால் கப்

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் அவலை சேர்த்து நன்றாக அலசிக்கொள்ளவேண்டும். அடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவிடவேண்டும்.

2. நன்றாக ஊறியவுடன் தண்ணீரை வடித்துவிட்டு, கைகளால் நன்றாக மசித்துக்கொள்ளவேண்டும்.

3. அதில் சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், அரிசி மாவு, தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கைகளால் மசித்து கலந்துகொள்ளவேண்டும். இதை அனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவேண்டும்.

4. ஒரு கடாயில் தாராளமாக எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் இந்த மாவை எடுத்து வடைகளாக தட்டி இருபுறமும் பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். வடை வடிவத்தில் சரியான சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவேண்டும்.

5. எண்ணெயில் பொரித்த எந்த ஒரு பொருளையும் எண்ணெய் வடிகட்டியில் சேர்த்து வடித்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணெயை அது வடித்துவிடும். இந்த வடையை மாலை நேரத்தில் டீயுடன் சேர்த்து ஸ்னாக்ஸாக சாப்பிட சுவை அள்ளும்.

இந்த அவல் வடையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் அடிக்கடி செய்வீர்கள். திடீர் விருந்தாளி வந்தால் அவர்களுக்கு இதை செய்துகொடுக்க ஏற்றது. இதை அவர்களும் பாராட்டுவார்கள்.

குறிப்புகள் 

வடை செய்ய எப்போதும் கெட்டி அவலைப் பயன்படுத்துங்கள். அதிக நேரம் ஊறவத்துவிடக்கூடாது. நீண்ட நேரம் ஊறினால் அது கரைந்துவிடும். வடை மொறு மொறுப்பாக இருக்க அரிசி மாவைப் பயன்படுத்தவேண்டும். வடிக்கும்போது தண்ணீரை நன்றாக வடிகட்டவேண்டும். மசாலக்களை சேர்க்கும்போதுஇ மாவுக்கு ஏற்ற அளவில் சேர்க்கவேண்டும். வடையை பிடிக்கும்போது கவனமாக இருக்கவேண்டும். எண்ணெயின் பதம் மிகவும் அவசியம்.