‘அக்னி சிறகே எழுந்து வா’ எப்போதும் முடங்காமல் ஏதாவது செய்யவேண்டும்! பெண்களை தரம் உயர்த்தும் 5 வழிகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ‘அக்னி சிறகே எழுந்து வா’ எப்போதும் முடங்காமல் ஏதாவது செய்யவேண்டும்! பெண்களை தரம் உயர்த்தும் 5 வழிகள்!

‘அக்னி சிறகே எழுந்து வா’ எப்போதும் முடங்காமல் ஏதாவது செய்யவேண்டும்! பெண்களை தரம் உயர்த்தும் 5 வழிகள்!

Priyadarshini R HT Tamil
Jan 05, 2025 11:17 AM IST

பெண்களை தங்களை முன்னேற்றிக்கொள்ள என்ன செய்யவேண்டும்? நீங்கள் சிறப்பாக மாறலாம்!

‘அக்னி சிறகே எழுந்து வா’ எப்போதும் முடங்காமல் ஏதாவது செய்யவேண்டும்! பெண்களை தரம் உயர்த்தும் 5 வழிகள்!
‘அக்னி சிறகே எழுந்து வா’ எப்போதும் முடங்காமல் ஏதாவது செய்யவேண்டும்! பெண்களை தரம் உயர்த்தும் 5 வழிகள்!

கிரியேட்டிவ் எக்ஸ்பிரஷன்

பெயின்ட்டிங், எழுதுவது, கிராஃப்ட்கள் செய்வது மற்றும் போட்டோஃகிராபி போன்ற கிரியேட்டிவான விஷயங்களில் நீங்கள் ஈடுபடும்போது, அது உங்களை வெளிப்படுத்த உதவும். இது உங்களின் மனத்தெளிவையும், உணர்வு ரீதியான நலனுக்கும் நல்லது. கிரியேட்டிவிட்டி உங்களின் கற்பனைக்கு மிகவும் உதவும்.

உங்களின் உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்த உதவும். உங்களின் மனஅழுத்தத்தைப் போக்கும். அது உங்களின் நாள் குறித்து எழுதுவது அல்லது காலிகிராஃபி கற்றுக்கொள்வது என எதுவாக இருந்தாலும், உங்களுக்கு முழுமையான நிலையையும், எதையோ சாதித்து முடித்தவிட்ட உணர்வையும் கொடுக்கும்.

உடற்பயிற்சி மற்றும் ஃபிட்னஸ்

நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது, உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு நல்லது. உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை கண்டுபிடியுங்கள். இது உங்களுக்கான உடற்பயிற்சியை ஒரு வேலையைப்போல் செய்யுங்கள். அது யோகா அல்லது டான்ஸ் அல்லது ஏதேனும் தற்காப்புக் கலைகள் என உங்களை மேம்படுத்துவதாகவும், உங்களின் மன ஆற்றலையும், தன்னம்பிக்கையையும் அதிகரிப்பதாக இருக்கவேண்டும்.

உங்களின் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க இந்தப்பழக்கங்கள் உங்களுக்கு உதவும். ஆனால் தன்னம்பிக்கை மற்றும் மீண்டுடெழும் திறனையும் வளர்க்கிறது. இந்த நடவடிக்கைகள் உங்கள் உடலில் இயற்கையாகவே எண்டோஃபின்கள் சுரக்க உதவுகிறது. இது உங்களை ஆற்றல் கொண்டவராகவும், வாழ்வின் சவால்களை நீங்கள் சந்திக்க துணிந்தவராகவும் மாற்றுகிறது.

தோட்டம்

மனதுக்கு இதமான ஹாபி என்றால் அது தோட்டம் அமைப்பதுதான். இது உங்களை இயற்கையுடன் பிணைத்து வைத்திருக்கிறது. இது உங்களுக்கு நீங்கள் வாழ்வில் ஒரு குறிகோளுடன் வாழ்வதைப்போன்ற உணர்வைக் கொடுக்கிறது. பூச்செடிகள் நடுவது, காய்கறிகள் வளர்ப்பது, அதை பறித்து சமைப்பது, வீட்டுக்குள் செடிகள் வளர்ப்பது, உங்களுக்கு பொருமையையும், மன திருப்தியையும் தரும்.

இது உங்கள் வாழ்க்கையை நீங்கள் ரசித்து வாழும் வழிகளுள் ஒன்று. உங்கள் முயற்சிகளுக்கு பலன் கிடைப்பதை கண்முன்னால் காணும்போது உங்களுக்கு ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. இது உங்கள் உடலுக்கும் பயிற்சியாகும். இதனால் உங்களுக்கு நாள் முழுவதும் சுறுசுறுப்பு கிடைக்கிறது.

வாசிப்பு மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல்

புத்தகங்களில் தான் அறிவு பொதிந்துள்ளது. நீங்கள் என்ன படித்தாலும், அதிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். அது கதை புத்தகமாக இருக்கலாம் அல்லது எதுவாக இருந்தாலும், அது உங்களுக்கு புதிய திறனை வளர்த்து எடுக்கிறது. மேலும் உங்களுக்கு சுய உதவியைக் கொடுக்கிறது.

வாசித்தல் உங்கள் கோணத்தை பெரிதாகவும், பரந்ததாகவும் மாற்றுகிறது. உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைக்கிறது. புத்தக சங்கங்களில் சேர்வது, ஆன்லைன்களில் படிப்பது உங்களின் சமூகத் திறன்களை அதிகரிக்கிறது. இது உங்களின் திறனை மேம்படுத்துகிறது. உங்களுக்கு புதிய யோசனைகளைக் கொடுக்கிறது. இது உங்களுக்கு புதிய தொடர்புகளை உருவாக்குகிறது.

சமையல்

சமையல் என்பதும் ஒரு சிறந்த கிரியேட்டிவான வழிதான். நீங்கள் அங்கு புதிய விஷயங்களைக் கற்கிறீர்கள். உலகின் பல்வேறு நாடுகளின் உணவுகளை சமைத்து முயற்சிக்கிறீர்கள். இதனால் உங்கள் உடலுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்க்ள் கிடைக்கிறது. இது உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவுகிறது. சமைப்பது மற்றும் பேக்கிங் செய்வது இது ஒரு தியானம் போன்றது. மேலும் மற்றவர்கள் மீதான உங்களின் அன்பையும் காட்டுகிறது.

எனவே பெண்களே எப்போதும் தேங்கிவிடாதீர்கள். எதிலாவது கவனம்செலுத்தி உங்கள் திறனை தொடர்ந்து வளர்த்துக்கொண்டேயிருங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.