பிராணாயாமம் செய்வதல் கிடைக்கும் அற்புத பலன்கள்!
ஆழமாக சுவாசிக்காமல் இருப்பதனால் நாள்பட்ட மனஅழுத்தம் ஏற்படுவதோடு, உடலில் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதிலிருந்து விடுபட பிராணாயாமம் சிறந்த வழியாக உள்ளது.

உடலை ஃபிட்டாக வைத்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயாராகிறோம். இதில் உடல் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் நாம், உடல் ஆரோக்கியத்துக்கு மிக முக்கியமான விஷயமாகத் திகழும் சுவாச பயிற்சி பற்றி பெரிதாக கண்டுகொள்வதில்லை.
அன்றாட பணி மற்றும் அதுதொடர்பான அழுத்தங்கள் காரணமாக சில சமயங்களில் நமது சுவாசம் ஆழமற்றதாகவும், வேகமாகவும் மாறுகிறது. ஆழாமாக சுவாசிக்க தவறும்போது, மனஅழுத்தங்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பு குறைவாகிறது. இதன் விளைவாக வேறு சில ஆரோக்கிய பிரச்னைகளும் ஏற்படலாம்.
பண்டைய காலத்தில் யோகா பயிற்சியின்போது ஒரு அங்கமாக பிராணாயாமம் என்கிற மூச்சு பயிற்சி இடம்பெற்றிருந்தது. பிரமாரி, கபால் பதி, நதிசோதனா, உஜ்ஜயி, பாஸ்த்ரிகா என பல்வேறு விதமான பிராணாயாமம் தொழில்நுட்பங்கள் சுவாச பயிற்சியில் கட்டுப்பாட்டை கொண்டுவரவும், மனஅழுத்தத்திலிருந்து விடுபடவும், உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் அளவை தரவும் உதவுகிறது.