தோட்டம் அமைக்க துவங்குபவரா நீங்கள்? இதோ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்? இந்த 11 குறிப்புகள் உதவும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தோட்டம் அமைக்க துவங்குபவரா நீங்கள்? இதோ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்? இந்த 11 குறிப்புகள் உதவும்!

தோட்டம் அமைக்க துவங்குபவரா நீங்கள்? இதோ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்? இந்த 11 குறிப்புகள் உதவும்!

Priyadarshini R HT Tamil
Dec 29, 2024 07:00 AM IST

தோட்டம் அமைக்க துவங்குபவர் என்றால் உங்களுக்கு இந்த குறிப்புகள் உதவும்.

தோட்டம் அமைக்க துவங்குபவரா நீங்கள்? இதோ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்? நல்ல செடிகள் வளர்க்க வாழ்த்துக்கள்!
தோட்டம் அமைக்க துவங்குபவரா நீங்கள்? இதோ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்? நல்ல செடிகள் வளர்க்க வாழ்த்துக்கள்!

மண் தொட்டியைப் பயன்படுத்துங்கள்

நீங்கள் உங்கள் வீட்டில் தோட்டம் அமைக்க பயன்படுத்தும் தொட்டிகள் பிளாஸ்டிக் அல்லது மற்ற எதிலும் ஆன தொட்டிகளைப் பயன்படுத்தவேண்டாம். மண் தொட்டிகளை தேடி தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துங்கள். அவை செடிகளை தாங்கும் அளவுக்கு உறுதியானதாக இருக்கும். அதிகளவு தண்ணீரை உறிஞ்சி உள்ளே மண்ணை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

தொட்டியில் சிறிய துவாரங்கள் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்

தோட்டம் அமைக்கும் துவக்கத்தில் தாவரங்களை நடுவதை மேம்படுத்த வேண்டும் என்பதில் தோட்டம் அமைப்பவர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அதனால் அவர்கள் பழைய பாட்டில்கள், பாத்திரங்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்களில் தாங்களே தொட்டிகளை உருவாக்கி, மண் கலவையை போட்டு தாவரங்களை வளர்க்க துவங்குவார்கள். இதனால் தொட்டிகளில் துவாரங்களைப் போடுவதற்கு மறந்துவிடுவார்கள். எனவே நீங்கள் எந்த பாத்திரத்தை பயன்படுத்தினாலும் அதில் துவாரம் இருக்கவேண்டும். அப்போதுதான் அதிக தண்ணீர் வெளியேறிவிடும். இல்லாவிட்டால், தண்ணீர் தொட்டியிலே தங்கி வேர் அழுகி தாவரம் கெட்டுப்போய்விடும்.

அதிகம் தண்ணீர்விடுவது மற்றும் குறைவாக தண்ணீர் விடுவது

அதிகம் தண்ணீர் விட்டால் வேர் அழுகிவிடும். கொஞ்சமாக விட்டால், வறண்டு போகும். இரண்டாலும் தாவரம் அழியும். எனவே சரியான அளவு தண்ணீர் விடவேண்டும். கோடைக்காலத்தில் நன்றாக தண்ணீர் ஊற்றவேண்டும். மேற்புற மண் காய்ந்துவிட்டால் தண்ணீர் ஊற்றவேண்டும். இலைகளைப்போட்டு, தண்ணீரை தக்கவைக்கவும் வழி செய்து விடுங்கள். மழைக் காலங்களில் ஈரப்பதம் இருக்கட்டும் அதிக ஈரம் இருக்கக்கூடாது.

சதைப்பற்றுள்ள தாவரங்களில் இருந்து துவங்கவேண்டும்

நிபுணர்கள் மற்றும் தோட்டம் அமைக்க துவங்குபவர்கள் என அனைவருக்கும் சதைப்பற்றுள்ள தாவரங்கள் ஏற்றது. நிபுணர்கள் மற்றும் வீட்டில் தோட்டம் அமைத்து அனுபவம் உள்ளவர்கள், சதைப்பற்றுள்ள தாவரங்களில் இருந்து துவங்கலாம். அவற்றை பராமரிப்பது எளிது. அதற்குத்தான் அதிகம் தண்ணீர் ஊற்றவேண்டாம். வெளிச்சமும் தேவையில்லை. அதுவும் எண்ணற்ற வகைகள் உள்ளது.

மணி ப்ளான்ட்

தோட்டம் அமைக்க துவங்குபவர்கள், முதலில் மணி ப்ளான்ட் வளர்க்கலாம். இதை வளர்ப்பது எளிது. இது தண்ணீர் மற்றும் மண் இரண்டிலும் வளரும். ஆண்டுகள் கடந்தும் வளரும், உங்களை மேலும் செடிகள் வளர்க்க ஊக்கப்படுத்தும்.

எப்போது பூச்செடிகள் நடலாம்?

வீட்டுக்குள் வளர்க்கும் செடிகளுடன் ஒப்பிடும்போது, பூக்கள் வளர்ப்பது கடினமானது. சில நேரங்களில் அதிகம் செலவு வைப்பதும் ஆகும். பூக்களை வளர்க்கத் துவங்கினால் நீங்கள் சாமந்தி பூக்களை முதலில் நட்டு வளர்க்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இவற்றை இந்தியாவில் வளர்ப்பது எளிது. உங்கள் தோட்டம் மற்றும் சுற்றத்துக்கும் நிறத்தைக் கொடுக்கிறது.

வேம்பு

தோட்டம் அமைப்பவர்களுக்கு வேப்ப எண்ணெய் ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது இயற்கை பூச்சிக்கொல்லியாகும். அது செடிகளின் ஆரோக்கியத்துக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது. பூச்சிகளை விரட்டும். கரையான்கள், ஒட்டுண்ணிகள் என எதுவும் வராது.

மண்புழுக்கள் உங்களின் எதிரியல்ல

தோட்டம் அமைப்பவர்களுக்கு மற்றொரு முக்கிய குறிப்பு என்றால், மண் புழுக்கள் உங்கள் எதிரியல்ல. நண்பன். தோட்டம் அமைக்க துவங்குபவர்கள். தோட்டத்தில் மண் புழுக்கள் முதல் எந்த புழுவைப் பார்த்தாலும் அவை செடிகளை அழித்து விடும் என்று எண்ணி, உடனே அவற்றை அடித்து விரட்டவேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால், அதுகுறித்து நீங்கள் கவலைகொள்ள தேவையில்லை.

சூரிய ஒளி

வீட்டுக்கு உள்ளே வளர்க்கக் கூடிய தாவரங்களைத் தவிர மற்ற தாவரங்களுக்கு 4 மணி நேரங்கள் நேரடி சூரிய ஒளி தேவை. இது செடிகள் வளர்ந்து, பூக்க உதவும். முதலில் சிறிய இடத்தில் துவங்குங்கள். போதிய இடைவெளிவிட்டு தாவரங்களை நடவேண்டும். அப்போதுதான் போதிய சூரிய ஒளி ஒவ்வொரு தாவரத்துக்கும் கிடைக்கும்.

சரியான மண் கலவை

ஒவ்வொரு செடிக்கும் ஒவ்வொரு மண் தேவை. நீங்கள் தாமரைச் செடிகள் வளர்த்தால், அதற்கு களி மண் தேவை. மூலிகைச் செடிகள் மற்றும் வேறு செடிகளுக்கு தண்ணிர் ஊற்றினாலே போதும். எந்தச் செடிக்கும் மண் கலவை சரியானதாக இருக்கவேண்டும். மண், மணல், வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஆர்கானிக் உரம் என இவற்றை கலந்துகொள்ளவேண்டும்.

நன்றாக ஆராயுங்கள்

நீங்கள் நர்சரிக்குள் நுழையும் முன் பல்வேறு விதைகளை வாங்கி, நன்றாக ஆய்ந்தறிந்து உங்கள் பகுதியில் எது வளரும் என்று பார்த்து வளருங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.