‘ஏஜிங் லைக் எ ஃபைன் ஒயின்’ 60 வயதிலும் 16 போன்ற தோற்றம் வேண்டுமா? – மருத்துவர் கூறுவது என்ன?
என்றும் இளமையுடன் வாழ சித்த மருத்துவர் கூறும் வழி என்ன?
வயது அதிகமாகும்போது உங்களுக்கு வயோதிக தோற்றம் ஏற்படும். இதனால் மனிதர்கள், விலங்குகள் மற்றும் அனைத்து உயிரினங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இது உடல், மன மற்றும் சமூக மாற்றங்களைக் கொண்டுவரும்.
உடலுக்கு ஏற்படும் வயோதிகம்
உடலில் செல்கள் இழப்பதால் இந்த வயோதிக தோற்றம் ஏற்படுகிறது. இதனால் திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகள் இயங்குவது குறைந்துவிடுகிறது. உடல் சிலவற்றை தானாகவே சரிசெய்யும் உடலின் திறனை குறைக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது.
சமூக வயோதிகம்
சமூக வயோதிகம் என்பது, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்படுவது எப்படி என்பதும், அதேபோல், சமூகத்தில் ஒவ்வொருவரின் பங்களிப்பு எவ்வாறு மாறுகிறது என்பதிலும் மாற்றம் ஏற்படுவது சமூக வயோதிகம் எனப்படுகிறது.
வயோதிகத்தால் ஏற்படக்கூடிய வியாதிகள்
புற்றுநோய்
மறதி
இதய கோளாறுகள் ஆகியவை ஆகும்.
எனவே வயது அதிகரிக்கும்போது, நாம் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை மேற்கொள்வது அவசியம்.
ஏஜிங் லைக் எ ஃபைன் வைன் என்று கேள்விபட்டிருப்பீர்கள். வயதானாலும் அழகு தோற்றமும், பொலிவும் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். இளமைத்தோற்றம் நம்மை விட்டு போகக்கூடாது என்ற எண்ணம் அனைவரும் இருக்கும் இயல்பான ஒன்றுதான். அதற்கு நமது உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை என அனைத்தும் சிறப்பாக இருக்கவேண்டும். நீங்கள் உடற்பயிற்சியை கட்டாயம் செய்யவேண்டும்.
மனம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். இதையெல்லாம் நீங்கள் சரியாக வைத்துக்கொள்ளும்போது, உங்களின் இளமைத் தோற்றம் உங்களுடனே ஒட்டிக்கொண்டு வாழும். அதையும் கடந்து நீங்கள் இந்த சிறிய விஷயத்தை பின்பற்றினால் போதும். அது உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுப்பதுடன், உங்களின் இளமைத் தோற்றத்தையும் தக்கவைக்கிறது. அது என்னவென்று திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் கூறுகிறார். அவர் இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது என்னவென்று பாருங்கள்.
சித்த மருத்துவம்
சித்த மருத்துவத்தில் காய கற்பம் என்ற குணம் உங்கள் இளமையைத் தக்கவைக்கும். அதற்கு நீங்கள் அமுக்கரா சூரணம் மாத்திரை மற்றும் திரிபலா மாத்திரைகளை வாங்கி, தினமும் காலை மற்றும் மாலை இருவேளையும் தலா இரண்டு மாத்திரைகள் எடுத்துக்கொள்ளவேண்டும். இதை நீங்கள் எடுத்துப் பாருங்கள், உங்கள் உடலின் வனப்பு தானகவே அதிகரிப்பதைக் காணலாம்.
அமுக்கரா மாத்திரையின் உட்பொருட்கள்
அமுக்கரா கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, ஏலக்காய், சிறுநாகப்பூ ஆகிய 7 பொருட்கள் கலந்துள்ளது.
திரிபலா மாத்திரையின் உட்பொருட்கள்
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலந்து உள்ளது.
இந்த மாத்திரைகளை நீங்கள் உணவு உண்டபின் தொடர்ந்து சாப்பிடவேண்டும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்